India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் முகவர்கள் மூலமாகவும், சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும், ஒன்றியம் மற்றும் குழுக்கள் மூலம் நடத்தப்படும் பாலகங்கள் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 23,500 லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 443 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 104 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 787 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 349 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 101 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
காலை 9:30 மணி – கீரிப்பாறை அரசு பெப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டும் இ எஸ் ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க கோரியும் 58 வது நாளாக தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.மாலை ஆறுகாணி சந்திப்பில் குருசுமலை பகுதிக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டம் நடக்கிறது
நாகர்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மறு மார்க்கத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் இயங்கும் நாகர்கோவில் – தாம்பரம் – நாகார்கோயில் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் முன்பதிவு தொடங்கும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா நேற்று கூறியதாவது,”கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க நாள்தோறும் வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போல் கன்னியாகுமரியிலும் நேரம் குறிப்பிட்டு ஆன்லைனில் டிகெட் வழங்குவது குறித்து மென்பொருள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. பணி முடிவடைந்ததும் ஆன்லைனில் பதிவு செய்து படகு பயணம் செய்யலாம்” என்றார்.
குமரி மாவட்ட கடலோர காவல் படையின் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான 60 நாள் பயிற்சி முகாம் இன்று(ஜன.31) காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் நடைபெறுகிறது.இந்த பயிற்சி முகாமை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.இந்த தகவலை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 83 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் கனகராஜ் சிவகங்கை மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நாகர்கோவில் கியூ பிராஞ்ச் சிஐடி இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ராமநாதபுரம் கியூ பிரிவு டிஎஸ்பியாகவும், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இன்று இன்ஸ்பெக்டர்களு்கு டி.எஸ்.பிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜெயச்சந்திரன் குமரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஆகவும், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா குமரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் நில மோசடி பிரிவு டிஎஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து தற்போது தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலில் செல்ல இருக்கும் காவலர்களுக்கு இன்று (30.01.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் தலைமையில் வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அவர்கள் கேட்ட காவல் நிலையங்கள் வழங்கப்பட்டது.
கன்னியா குமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதில், தலைவராக .D.ரவீந்திரன், பொதுச்செயலாளராக B. சிதம்பரதாணு, பொருளாளராக வெங்கட சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளாரக K.பகவதி பெருமாள் பிள்ளை, சங்க ஆலோசகராக கீழப்பாவூர் த ஆ. சண்முகையா, மேலும் நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.