Kanyakumari

News February 1, 2025

குமரியில் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு சிறமடம், கடுக்கரை, திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன் புதூர் ,பறக்கை ,புத்தளம், கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது

News February 1, 2025

டீக்கடைக்காரர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் 11 மணிக்கு மேல் கடையை அடைக்க காவல்துறை வற்புறுத்துவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரவு 11 மணிக்குள் கடையை மூட போலீசார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல, அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என நேற்று தீர்ப்பு வழங்கியது.

News February 1, 2025

குமரி மாவட்டத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பெ. 1)காலை 8:00 மணியுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் வெப்ப சலனத்தால் காரணமாக பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் :
அடையாமடை 5,
குமாரபுரம் 5,
நெய்யூர் 3, அப்பர் கோதையார் 2,
கல்லாறு எஸ்டேட் 1,
சிவலோகம் 0.5, என்று பதிவாகியுள்ளது.
இன்றும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் பிற்பகலுக்கு பிறகு மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

News February 1, 2025

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 475 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 174 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 787 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 443 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 104 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News February 1, 2025

மும்பை – நாகர்கோவில் இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில்

image

மும்பை நாகர்கோவில் இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மார்ச் மாதம் 10 ,12 , 17 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், மார்ச் 11, 13,18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணி – கீரிப்பாறை பரசுரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 59 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.இடலாக்குடி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடக்கிறது.மாலை – நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News February 1, 2025

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி – சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை, கோவை,மற்றும் கன்னியாகுமரியில் இருந்து 5 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரியில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2025

இரவு நேர டீக்கடைகளுக்கு நீதிமன்றம் அனுமதி

image

களியக்காவிளை பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் 11 மணிக்கு மேல் கடையை அடைக்க காவல்துறை வற்புறுத்துவதாக தொடர்ந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆணையை பின்பற்றி இரவு நேர டீ கடைகளை திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இரவு 11 மணிக்கு காவல் துறை கடைகளை மூட கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று மெட்ராஸ் ஹைகோர்ட்டிற்கான மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

News January 31, 2025

“காஷ்மீரையும் குமரியையும் இணைக்கும் ரயில்”

image

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் நாடு இணைக்கப்பட உள்ளதாகவும், மேலும் ஆயிரம் கிலோ மீட்டர் மெட்ரோ பாதைகளை இந்தியா அமைத்து சாதனை படைத்துள்ளதாகவும், மூன்றாவது பெரிய மெட்ரோ கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

News January 31, 2025

ஒரே வீட்டில் தந்தையும் மகனும் தூக்கிட்டு தற்கொலை

image

கருங்கல் அருகே இலவுவிளை கோட்டவிளை பகுதியைச் சார்ந்தவர் இயேசுதாஸ்(77). கூலி தொழிலாளியான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெயசிங் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். மூத்த மகன் ஜெயசிங் அவரது தந்தைக்கும் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. இந்நிலையில் இன்று(ஜன.31) மதியம் இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

error: Content is protected !!