India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக மாதவன் (எ) ஐயப்பன் இன்று தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் அவர்களை சந்தித்து வாழ்த்து அளித்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 412 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களில் 171 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 223 பேர் தலைமை காவலர்கள் 18 பேர் முதல் நிலை காவலர்கள் ஆவார்கள். இடம் மாற்றம் தொடர்பாக அண்மையில் எஸ்.பி ஸ்டாலின் காவலர்களை நேரில் சந்தித்து கருத்துக்கள் கேட்டு அறிந்தார். அதன் அடிப்படையில் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஜனவரி முதல் தேதி முதல் கடந்த 25- ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்றது, அதிக பாரத்துடன் சென்றது, வரிகட்டாதது, ஹெல்மெட் இல்லாமல் சென்றது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது என என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறி இயங்கியதாக 20,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வரும் நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதான் நடவடிக்கைகள் தொடரும் என நேற்று கூறினர்
அமெரிக்கா ChatGPT, Copilot, MetaAI, Grok, Gemini என்றும், சீனா Deepseek என்றும் அறிவு வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கிறது. இந்தியா மோடி ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும் வாட்சப் யூனிவர்சிட்டியில் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபகுமார் நேற்று(ஜன.28) குமரியில் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.
திருவட்டாறு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், பிரபல மலையாள, தமிழ் திரைப்பட பாடகருமான மறைந்த கமுகற புருஷோத்தமனின் மனைவி ரமணி புருஷோத்தமன் திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து திருவனந்தபுரம் பேரூர்கடை ஸ்வாதி நகர் வீட்டில் இன்று(ஜன.29) மதியம் 11.30 மணி வரை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு திருவட்டாறு கமுகற வீட்டில் இறுதி சடங்கு நடக்கிறது.
வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் சிடி கடைகளில் சோதனை நடத்தாமல் இருக்க கண்ணனிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். அவரும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்ஸ்பெக்டருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை இன்று விதித்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அரசு 17% சதவீத ஈரப்பதம் என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை 20% நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்களான புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவைகளை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா புகையிலை பொருட்கள் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் அருகே தெற்குசூரங்குடி வைகுண்டர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு விழா நேற்று(ஜன.27) நடைபெற்றது. விழாவில் பழவிளை கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ராமபிரதாப் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் ஒப்பித்தார்.அந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.