India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி பெண்களே, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

குமரி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய காலத்தில் திருவிதாங்கூர் என்றே அழைக்கப்பட்டது. 1949 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி மாகாணம் உருவானது. 1956ல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தின் கீழ் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் என அழைக்கப்பட்டு வருகிறது.

தக்கலை அண்ணா நகரை சேர்ந்தவர் வைகுந்த் (28) ராணுவ வீரர். முத்தலக்குறிச்சியில் புதிய வீடு கட்டி நவம்பர் மாதம் திருமணம் செய்து வீட்டில் குடிபுக முடிவு செய்திருந்தார். ஆக19 ம் தேதி அசாம் மணிப்பூரில் தங்கியிருந்த கூடாரம் வழியாக மின்சாரம் வைகுந்தை தாக்கியது. ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார். 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவர் உடல் நேற்று தகனம் செய்ப்பட்டது.

அருமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

கன்னியாகுமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை இனி எளிமையாக பெறலாம். அதற்கு eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.

மயிலாடி, சிபின்(25) என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு சிபினிடம் சண்டையிட்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று(ஆக.21) மனைவியை அழைத்து வர சிபின் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சிபினின் மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி சிபின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிபின் உயிரிழந்தார். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.