Kanyakumari

News February 1, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணி – கீரிப்பாறை பரசுரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 59 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.இடலாக்குடி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடக்கிறது.மாலை – நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News February 1, 2025

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி – சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை, கோவை,மற்றும் கன்னியாகுமரியில் இருந்து 5 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரியில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2025

இரவு நேர டீக்கடைகளுக்கு நீதிமன்றம் அனுமதி

image

களியக்காவிளை பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் 11 மணிக்கு மேல் கடையை அடைக்க காவல்துறை வற்புறுத்துவதாக தொடர்ந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆணையை பின்பற்றி இரவு நேர டீ கடைகளை திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இரவு 11 மணிக்கு காவல் துறை கடைகளை மூட கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று மெட்ராஸ் ஹைகோர்ட்டிற்கான மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

News January 31, 2025

“காஷ்மீரையும் குமரியையும் இணைக்கும் ரயில்”

image

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் நாடு இணைக்கப்பட உள்ளதாகவும், மேலும் ஆயிரம் கிலோ மீட்டர் மெட்ரோ பாதைகளை இந்தியா அமைத்து சாதனை படைத்துள்ளதாகவும், மூன்றாவது பெரிய மெட்ரோ கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

News January 31, 2025

ஒரே வீட்டில் தந்தையும் மகனும் தூக்கிட்டு தற்கொலை

image

கருங்கல் அருகே இலவுவிளை கோட்டவிளை பகுதியைச் சார்ந்தவர் இயேசுதாஸ்(77). கூலி தொழிலாளியான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெயசிங் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். மூத்த மகன் ஜெயசிங் அவரது தந்தைக்கும் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. இந்நிலையில் இன்று(ஜன.31) மதியம் இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

News January 31, 2025

குமரி மாவட்டத்தில் தினசரி 23,500 லிட்டர் பால் விற்பனை: ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் முகவர்கள் மூலமாகவும், சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும், ஒன்றியம் மற்றும் குழுக்கள் மூலம் நடத்தப்படும் பாலகங்கள் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 23,500 லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.

News January 31, 2025

குமரி அணைகளுக்கான இன்றைய நீர்வரத்து விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 443 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 104 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 787 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 349 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 101 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News January 31, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9:30 மணி – கீரிப்பாறை அரசு பெப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டும் இ எஸ் ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க கோரியும் 58 வது நாளாக தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.மாலை ஆறுகாணி சந்திப்பில் குருசுமலை பகுதிக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டம் நடக்கிறது

News January 31, 2025

குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு

image

நாகர்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மறு மார்க்கத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் இயங்கும் நாகர்கோவில் – தாம்பரம் – நாகார்கோயில் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் முன்பதிவு தொடங்கும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News January 31, 2025

குமரி படகில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு

image

மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா நேற்று கூறியதாவது,”கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க நாள்தோறும் வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போல் கன்னியாகுமரியிலும் நேரம் குறிப்பிட்டு ஆன்லைனில் டிகெட் வழங்குவது குறித்து மென்பொருள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. பணி முடிவடைந்ததும் ஆன்லைனில் பதிவு செய்து படகு பயணம் செய்யலாம்” என்றார்.

error: Content is protected !!