India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கொல்லங்கோடு சுதர்சன், கீதாகுமாரிக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கீதாகுமாரி குழந்தைக்காக சிகிச்சையில் இருந்தார். குழந்தை இல்லாத வேதனையில் கீதாகுமாரி செப்.9.ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுக்குறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை.

குமரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

குமரி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <

குமரி, குழித்துறை தெற்றிவிளை வீட்டை சேர்ந்தவர் அஜித் (31), இவர் குழித்துறை நகராட்சியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று 9-ம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஆஷா களியக்காவிளை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் சபா மண்டபத்தில் தொட்டில் அலங்கரிக்கப்பட்டு, அதில் ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்படுகிறது. பக்தர்கள் தொட்டிலை ஆட்டி மகிழலாம். தொடர்ந்து பாகவதம் வாசிக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அளவில் கலச பூஜை, அபிஷேகம், தீபாராதனையுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவடைகிறது.

தேங்காபட்டினம் மாதாபுரம் பகுதி ஜெயின் மெலார்டு (46) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் என கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் வருவதாக கூறிய அவர் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாளுக்கு நாள் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.