Kanyakumari

News February 19, 2025

சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதித்திடுக!

image

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் வெளியிட்ட செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் பிரபலமான சிவாலய ஓட்டம் பிப்.25,26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி சிவ பக்தர்கள் ஓடிச்சென்று கோவில்களில் வழிபடும் நிகழ்வு நடைபெறும். எனவே இந்த நாட்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு குமரி மாவட்டத்தில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News February 19, 2025

குமரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

image

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியில், அரபிக்கடல் தரை காற்று பிற்பகல் நேரத்தில் தற்காலிக காற்று முறிவை ஏற்படுத்துவதால் இன்று(பிப்.19) ஆறுகாணி, பத்துகாணி, நெட்டா, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட விளவங்கோடு தாலுகா பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் நேரத்தில் மாலை நேரத்தில் மேக கூட்டங்கள் உருவாகி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 19, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.19) காலை 10 மணிக்கு புதிதாக கொண்டுவரப்பட உள்ள வழக்கறிஞர் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை நீதிமன்றங்களில் இன்று வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு செய்கின்றனர்.#மாலை 6 மணிக்கு புத்தேரியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலையில் புழுதி பறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 19, 2025

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் ஏற்பாட்டில், 24 ஆம் தேதி அன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 25 ஆம் தேதி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தங்க மோதிரங்களை வழங்குகிறார் என அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News February 19, 2025

குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் சிலிக்கான் சேதம்

image

கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள கண்ணாடிகளின் நடுவே ஒட்டப்பட்டிருக்கும் சிலிக்கான் சேதமடைந்திருப்பதால் அதனை விரைந்து சரிசெய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன்.

News February 18, 2025

சென்னையில் முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகி

image

கன்னியாகுமரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் வி.அகஸ்தியன் இன்று ( பிப்ரவரி 18 ) சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அளித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

News February 18, 2025

குமரி அதிசய சாஸ்தா கோவில் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

குமரியில் அதிசய சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. பொதுவாக சாஸ்தா 2 கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு இடது கால் பெருவிரலை தரையிர் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.*SHARE IT*

News February 18, 2025

திரிபுரா கவர்னர் இன்று குமரி வருகை

image

திரிபுரா மாநில ஆளுநர் இந்திர சேனா ரெட்டி இன்று(பிப்.18) இரவு 8-30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கார்மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை (பிப்19) காலை 10 மணிக்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

News February 18, 2025

குமரி: பொது இடத்தில் மது அருந்திய 315 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் இருந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 15 நாளில் மட்டும் 315 பேர் மீது பொது இடத்தில் இருந்து மது அருந்தியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News February 18, 2025

புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி ஆய்வு

image

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!