India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவ – மாணவியர் கேரள மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா சென்ற நிலையில், பயணம் செய்த பேருந்து நேற்று(பிப்.19) விபத்துகுள்ளானது அறிந்து ஆற்றொண்ணா துயரம் அடைந்தேன். இத்துயரமான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
#இன்று(பிப்.20) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர் மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டு 75வது நாளாக தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஒற்றப்பனை விளை முதல் ஆலஞ்சி வரையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு CPIML லிபரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் பேசிய கலெக்டர் அழகு மீனா, சரித்திரம் படைத்த தலைவர்கள், உலக தொழில் முனைவோர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் புத்தகங்களை வாசிக்கிறவர்களாக இருந்ததால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் புத்தகம் வாசிக்கும் பழகத்தினை மறந்து வருகிறோம். அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என்றார்.
அருமனை தனிப்படை உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் 2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற சலீம் ராஜ், அப்துல் ஷெமி, அனீஷ், லிபின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்
“நாகர்கோவிலை சேர்ந்த 39 மாணவர்கள் கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்; சம்பவ இடத்தில் 2 மாணவிகளும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 1 மாணவரும் உயிரிழந்தார்கள் என்ற செய்தி மனதை உலுக்கியது; அவர்களின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக” எம்பி விஜய் வசந்த் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்து கேரள மாநிலம் மூணாறில் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மாணவிகள், ஒருவர் மாணவர் என மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளில் வேணிகா கன்னியாகுமரி அருகே கனகப்புரத்தைச் சேர்ந்தவர், ஆதிகா திங்கள் சந்தையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே சிதறாலில் வரலாற்று சிறப்புமிக்க சமண மலைக்கோவில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரையிலும் முனிவர்கள் இங்குள்ள கோவில் குகைகளில் வாழ்ந்ததாக சான்றுகள் உள்ளன. சமணர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான சிதறல் மலை கோவில்களில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள் இங்கு சமணப்பள்ளி ஒன்று செயல்பட்டதற்கான சான்றாக உள்ளது. இந்த கோவிலை ஏராளமானவர்கள் வந்து பார்வைக்கு செல்கிறார்கள்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி மீனவர்களுக்கு கருவூலம் மூலம் வழங்கிட தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.3 ஆயிரம் மட்டும் பயனாளிகள் வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகள் சந்தா தொகை ரூ.1500 இன்று (பிப்.19) ஆம் தேதி முதல் மீனவ பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2வது பரிசாக ரூ.5 லட்சமும், 3வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 1ஆம் தேதி ஆகும்.
கன்னியாகுமரி கடலில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கூண்டு பாலத்தின் கண்ணாடியில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்ணாடியை பாலத்தில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிக்கான் ரசாயனக் கலவை வெயில் காரணமாக இளகி உள்ளதே தவிர, பாலத்தில் எந்த பிரச்னையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.