India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட செயல்பாட்டை களைவதற்காக சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலில் மீன்பிடித்த மீனவர்களின் வலையில் அதிக அளவில் அயலை மீன்கள் சிக்கின. வழக்கமாக 2500 முதல் 3000 வரை விலை போகும் ஒரு பெட்டி மீன்கள் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் மீனவர்கள் வருத்தம் அடைந்தனர்.

குமரி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <

காட்டு விளையை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள். இவருக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பிறந்தது முதல் கணவர் குழந்தையின் தாயிடம் பேசாததால் குழந்தை வாயில் பேப்பரை திணித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) இன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே உங்க பணிகளை சீக்கிரம் முடிங்க.SHARE பண்ணுங்க…

நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்று நடைபெற்ற சோதனையில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் பைக் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே மேற்கொள்ளலாம் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

சிதறால் வட்ட விளையை சேர்ந்தவர் சத்யமணி (54) இவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று குளிக்க சென்றார். அப்போது அவரை தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது. இதனால் அவர் புதர்களை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.