India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#இன்று(பிப்.17) காலை 9 மணிக்கு இந்து முன்னணி தலைவர் தரணுலிங்க நாடார் பிறந்த நாளை முன்னிட்டு நாகராஜர் திடலில் இருந்து பைக் பேரணி நடக்கிறது.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.#பிற்பகல் 3:30 மணிக்கு திற்பரப்பு பேரூ., அலுவலகம் முன்பு பாஜக சார்பில் திருநந்திக்கரை பகுதி பள்ளத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்டம் கேரளபுரத்தில் கேரளா மற்றும் தமிழ் கலை வடிவில் உருவாக்கப்பட்ட அதிசய விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் ஆறு மாத காலம் வெள்ளை நிறத்திலும் ஆறு மாத காலம் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அதிசய விநாயகர் ஆவார். கேரள வர்மா மகாராஜாவால் இந்த கோயில் நிறுவப்பட்டது என கூறப்படுகிறது. பழமையான இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். SHARE IT.
திருவட்டாறு, ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். 4 மாதம் முன்பு திருமணம் நடந்து, மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இன்று காலை மனைவி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் செல்லும் போது, பயணம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியில் மோதி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக நாகர்கோவில் மற்றும் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பத்மநாபபுரத்தில் 36 டிகிரி செல்சியசும், குமரி மற்றும் மேல் புறத்தில் 34 டிகிரி செல்சியசும், குழித்துறை மற்றும் கிள்ளியூரில் தலா 33 டிகிரி செல்சியசும், நெய்யூரில் 31 டிகிரி செல்சியசும் வெப்பம் என்று பதிவாகியுள்ளதாக தனியார் வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (பிப் 16) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்தாப் (20) இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில்வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இவரது வீட்டின் பக்கத்தில் பெண் ஒருவர் உடை மாற்றுவதைப் பார்க்க முயற்சித்துள்ளார். இது குறித்து அந்த பெண்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அபிதாப்பை நேற்று (பிப்-16) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று காலை 11:00 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைக்கிறார். காலை 10 மணி மணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்நடக்கிறது. மாலை 5 மணிக்கு விசிக சார்பில் வடசேரி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆத்தூர் அருகே செண்பகத் தோப்பு விளையைச் சேர்ந்தவர் ஜோயி டேவிஸ் (27). இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் பகுதியில் சென்ற போது சாலை ஓரத்தில் நின்ற டாரஸ் லாரியின் பின்பக்கத்தில் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பொது இடத்தில் மது அருந்தியதாக சிவசங்கரன், ரமேஷ், டென்னிஸ், மரிய சிலுவை, வள்ளிநாயகம், முருகேசன், நீலகண்டன், நெல்சன், பால்ராஜ், லிபின் உட்பட 12 பேர் மீது போலீசார் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட 100 குடியிருப்பு வீடுகள் திறப்பு விழா மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 90 குடியிருப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா (பிப். 17) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. குமரி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அயலகதமிழர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.