India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

வெள்ளாங்கோடு பகுதி தொழிலாளியான அனில்குமார்(56) முதல் மனைவி இறந்ததால் 2.வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். அனில் குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனைவி இவரை விட்டுப்பிரிந்து சென்று விட்டார். நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளோர் அருமனை போலீசுக்குதகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அழுகிய நிலையில் இருந்த அனில்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

உண்ணாமலைக்கடை மாரிமுத்து (83), மகன் ராஜேஷ் (39). கொத்தனாரான ராஜேஷ் அடிக்கடி மது குடித்து வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபடுவார். செப்.21-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் மாரி முத்துவை தாக்க, ஆத்திரமடைந்த மாரிமுத்து மண்வெட்டியால் ராஜேஷின் கழுத்தில் வெட்டியுள்ளார். ராஜேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

சித்திரங்கோடு ராஜாங்கம் (32) நேற்று குலசேகரம் தாழபிடாகையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது தேங்காய் குளத்தில் விழுந்துள்ளது. குளத்தில் இறங்கி தேங்காய்களை எடுத்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது அவர் பாசி, புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் அங்குச் சென்று குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர்.

கட்டாக் ரயில் நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 16318 ஸ்ரீ வைஷ்ணோதேவி கத்ரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செப்.22 முதல் அக்.2 வரை கத்ராவிலிருந்து புறப்படும்போது பராங்க் ஜங்ஷன், கப்லியாஸ் இடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பதில் ரெயில் கட்டாக் நிலையத்தை தவிர்த்து நராஜ் மரத்தபூர் வழியாக இயங்கும். நராத் மரத்தபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதா ராணி பதவியை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞருமான தளவாய் சுந்தரம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து மதுரை நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தெரிவித்தார்.

குமரி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கபட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் தற்போது 13 ஏக்கர் அளவிலான இடங்கள் தொழில் முனைவோர்களுக்கு 94 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தொழில் முனைவோர்கள் வடசேரி வேளாண்மை தொழில் விற்பனை துணை இயக்குனரை அணுக ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குமரியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.