Kanyakumari

News March 2, 2025

குமரி: தலா ரூ.1 லட்சம் வழங்கிய எம்.எல்.ஏ

image

இணையம்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட, புத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவின் போது கொண்டு சென்ற ஏணி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களது குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் இன்று வழங்கினார்.

News March 2, 2025

மார்ஃபிங் செய்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த 30 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கோடிமுனையை சேர்ந்த ராபர்ட் டில்டன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் விலகி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராபர்ட் டில்டன் இளம்பெண் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இளம்பெண் அளித்த புகாரி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

News March 2, 2025

1 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் எஸ் எல் பி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11 நாட்களாக ஆறாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், கடந்த 11 நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (மார்ச்-1) கூறினார்.

News March 1, 2025

குமரியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இணையம் புத்தம் துறை மீனவர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைத்தேன்; அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

News March 1, 2025

குமரி அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

image

குமரி, இணையம் புத்தன் துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நடந்து வருகிறது. அலங்காரப் பணிகளை மேற்கொள்ள உயரமான இரும்பு ஏணியை தூக்கி சென்ற நிலையில், மின் லைனில் ஏணிப்பட்டு மைக்கேல் பிந்து, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 1, 2025

மண்டைக்காட்டில் திருவிழா: பாதுகாப்பில் 3 மாவட்ட போலீஸ்

image

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நாளை(மார்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த கொடை விழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவிழா பாதுகாப்பு பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்று அங்கு திறக்கப்பட்டுள்ளது.

News March 1, 2025

குமரியில் டால்பின், கடல் ஆமை விளக்க மையம்

image

குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று நாகர்கோவிலில் கூறியதாவது, “குமரி மாவட்டத்தில் மாறாமலை, ஆனை நிறுத்தி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மலை ஏறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் மலையேற அனுமதி வழங்கப்படும். கன்னியாகுமரி கோவளம் பகுதியில் டால்பின் மற்றும் கடல் ஆமைகள் விளக்க மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது” என்றார்.

News March 1, 2025

கருங்கல்: கழுத்தறுக்கப்பட்ட கிடந்த தம்பதி! அதிர்ச்சி

image

கருங்கல் அருகே திப்பிரமலை அருகே கண்ணன் விளையை சேர்ந்தவர் ஜெகன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் வீட்டில் நேற்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 1, 2025

குமரி மாவட்டத்தில் தனிப்படைகள் திடீர் கலைப்பு!

image

குமரி மாவட்டத்தில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவம் தடுப்பதற்காக ஒவ்வொரு டிவிசன்களுக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிப்படைகளை கலைத்துள்ள குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின், அவர்களை காவல் நிலையங்களில் பணிபுரிய அவர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று எஸ்.பி. தனிப்பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்களும் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

News March 1, 2025

மேற்குத் தொடர்ச்சி மலை வன விலங்குகள் புகைப்பட கண்காட்சி

image

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் இன்று(மார்ச் 1) முதல் 4ஆம் தேதி வரை வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வகை உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுவதாக மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் நேற்று தெரிவித்தார். SHARE IT.

error: Content is protected !!