India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே ‘<
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 22.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டம் ஆனது 23.03.2025 அன்று காலை 11 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
குமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மருத்துவ அலுவலர் 5, செவிலியர் 5, பல்நோக்கு சுகாதார பணியாளர் 5, மருத்துவமனை பணியாளர் 5 என 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் மார்ச் 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
#குமரியில் இன்று(மார்ச் 16) பிற்பகல் 2 மணிக்கு கல்வி மற்றும் கலை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வடசேரியில் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடக்கிறது.#பிற்பகல் 2.30 மணிக்கு தெற்குச் சூரங்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.#மாலை 6 மணிக்கு தேவ சகாயம் மூன்று காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பரம் பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 31 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ ஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். குஜராத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி 31ஆம் தேதி குமரியில் முடிவடைகிறது இதனை வரவேற்க அமித்ஷா வருகை தர உள்ளார்.
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2024ஆம் ஆண்டு 443 பேருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறியப்பட்டு 392 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, 22 நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சையும், 30 பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. குமரி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 14) தெரிவித்துள்ளார். SHARE IT.
#இன்று(மார்ச் 15) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் 95வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு நித்திரவிளை சந்திப்பில் CPIML Red flag சார்பில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 47. இவரது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவர் சுடர் பிரவீனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுடர் பிரவீன் ஜெயந்தி வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மகன் குமாரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் நேற்று(மார்ச் 14) வழக்குப் பதிவு செய்து சுடர் பிரவினை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி முற்பகல் 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
நாகர்கோவில் மாநகரில் மாநகர அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாரதி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் வடசேரி மீனாட்சிபுரம் பகுதிகளில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 126 கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 கடைகளுக்கு ரூ.22500 அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.