Kanyakumari

News October 3, 2025

குமரியில் தேவையான விதை நெல் கையிருப்பு உள்ளது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் இரண்டாவது பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். விதை நாள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

News October 3, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக் 3) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 40.26 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 59. 50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 7. 31 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 7.41 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 523 கனஅடி, பெருஞ்சாணிக்கு 225 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News October 3, 2025

குமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி அப்டேட்

image

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர எதிர்பார்க்கப்படுகிறது.பணிகளுக்காக மத்திய ரயில்வே கடந்த 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் ரூ.940 கோடி விடவை நிதியை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் கூடுதல் ரூ.575 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 3, 2025

குமரி: காரில் 810 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

image

குமரி, நித்திரவிளை போலீசார் நேற்று மாங்காடு பகுதியில் ரோந்து சென்ற போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 26 பிளாஸ்டிக் கேன்களில் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் 910 லிட்டர் இருந்தது. போலீசார் காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் ஜாண் பெஸ்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 3, 2025

குமரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..

News October 3, 2025

குமரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<> க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News October 3, 2025

குமரி: டிஜிட்டல் மோசடி – மக்களே ALERT!

image

குமரி, குலசேகரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மும்பை போலீஸ் அதிகாரி (போலி) சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக்கூறி, ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டி வங்கியில் உள்ள பணத்தை ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி அபகரித்துள்ளார். ஆசிரியரின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை. இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

News October 3, 2025

நாகர்கோவில்: மசாஜ் சென்டரில் விபசாரம்

image

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் விபசாரம் நடப்பது உறுதி செய்யபட்டு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்டனர். மசாஜ் சென்டர் மேலாளர் காந்தராஜா (24) கைது செய்யப்பட்டார். அவருக்குத் துணையாக இருந்த உடையார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டனர்.

News October 3, 2025

குமரி: கதர் விற்பனையை துவங்கி வைத்த கலெக்டர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள
கதர் கிராம அலுவலகத்தில் நடைபெறும் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 2, 2025

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!