Kanyakumari

News March 18, 2025

இன்று புறப்படும் குமரி – மும்பை ரயில் 2.30 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரி – மும்பை CST சிறப்பு ரயில்(எண் 01006) இன்று(மார்ச் 18) பிற்பகல 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டியிருந்தது. இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தால் 2 மணி 30 நிமிடம் தாமதம், மாலை 16.45 மணிக்கு CST சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 18, 2025

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

image

குமரி – கேரள எல்லை பகுதியான பழுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள – தமிழக போலீசார் விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நிதி நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கை கேரள அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.

News March 18, 2025

10th பொதுத்தேர்வு: குமரயில் 22,044 பேருக்கு ஹால் டிக்கெட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.

News March 18, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 18) 28.49 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.20 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 60 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 28 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். குமரி மாவட்டத்தில் 1.22 லட்சம் பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 51% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 10 மணிக்கு EPF பென்ஷன் குறைந்தபட்சம் 5,000 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மத்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4 மணிக்கு பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 18, 2025

மக்கள் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் – குமரியில் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து ஓஆர்எஸ் தண்ணீர் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெப்ப அலைகளின் தாக்கம் குறித்து ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 17, 2025

குமரி: எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

image

குமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 17, 2025

கன்னியாகுமரி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

image

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

குமரி: உணவு, தங்கும் இடத்துடன் பயிற்சி வகுப்பு!

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில்(JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. உணவு, தங்குமிடம் & பயிற்சிக்கான 11 மாத செலவை CPCL நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். www.tahdco.com தளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!