India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குமரி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு குமரி சென்றடையும். மார்ச் 31 அன்று இரவு 8.30 மணிக்கு குமரியில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 க்கு தாம்பரத்தில் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
குலசேகரப்புதூரைச் சேர்ந்தவர் வைரவன். இவரும், இவரது நண்பர் முகேஷ் என்பவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்கு நடந்த தகராறில் வைரவன், இசக்கி ராஜா, முகேஷ் ஆகியோர் தடுத்து தகராறை விலக்கி விட்டனர். இந்நிலையில் குலசேகரன்புதூர் சந்திப்பில் அவர்கள் நிற்கும் போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இன்று 17 புதிய பேருந்துகள் வழி தடத்தை மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ஜே.ஜி பிரின்ஸ், தாரகை கத்பர்ட், துணை மேயர், மண்டலத்தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*பஸ் பயணிகளுக்கு பகிரவும்*
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பரப்பு பகுதியில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 7, அப்பர் கோதையார் 5, சிற்றாறு இரண்டு 4, கொட்டாரம் 3, சிற்றாறு ஒன்று 2, லோயர் கோதையார் , கல்லார் மற்றும் களியல் பகுதிகளில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 5 கற்கள் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் இருந்து உயர் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள் இந்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தாம்பரம் – குமரி இடையே ரமலான் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. தாம்பரத்திலிருந்து குமரிக்கு(வண்டி எண் – 06037) மார்ச் 28 அன்று மாலை 7 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை குமரி 8:00 மணி வந்தடையும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து(வண்டி எண் 06038) மார்ச் 31 அன்று குமரியில் இருந்து இரவு 8:30க்கு கிளம்பி மறுநாள் காலை 8:55க்கு தாம்பரம் சென்றடையும்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 22) 28.74அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.90அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#காலை 10.30 மணிக்கு திருவட்டார் – திருவரம்பு சாலைப் பணியை தொடங்கி வைக்கிறார்.#11.15 மணிக்கு குலசேகரம் – அரசமூடு விளையாட்டு மைதான பணிகளை ஆய்வு செய்கிறார்.#மதியம் 12.15 மணிக்கு பேச்சிப்பாறை – கோதையாறு சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.#மாலை 6 மணிக்கு கீழ்குளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
குமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள ரப்பர் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் ரப்பர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்து, நேற்று(மார்ச் 21) 100 கிலோ ரப்பர் ரூ.20 ஆயிரத்தை எட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.19 ஆயிரத்து 700 மற்றும் 19 ஆயிரத்து 800 போன்ற விலையில் இருந்த ரப்பர் நேற்று ரூ.20,000 ஆனது.
Sorry, no posts matched your criteria.