India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொல்லங்கோடு பகுதியில் தனியார் மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை போலீசார் ரகசிய கண்காணித்து வந்ததன் அடிப்படையில், அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிரடி படையினர் நடத்திய சோதனையில் 450 மது பாட்டில்கள் மற்றும் ரூ.12000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லங்கோடு பகுதியில் தனியார் மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை போலீசார் ரகசிய கண்காணித்து வந்ததன் அடிப்படையில், அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து இன்று 5-ம் தேதி அதிரடி படையினர் நடத்திய சோதனையில் 450 மது பாட்டில்கள் மற்றும் 12000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க.

அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தில் பட்டம், பட்டயம் மற்றும் கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் 2025-2026ம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான இயந்திரவியல் ஆட்டோமொபைல் பிரிவுகளில் பொறியியல் பட்டம் பட்டயம் மற்றும் கலை 2021, 2022, 2023, 2024 2025-பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என TNSTC இன்று தெரிவித்துள்ளது.

கோட்டவிளையை சேர்ந்தவர் செல்லம்மாள் (65) இவர் ராமபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று கோட்ட விளை கல்லுப்பாலம் பகுதியில் குளிப்பதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பறித்து விட்டு சென்று விட்டனர். இதுக்குறித்து அஞ்சு கிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் “QR” குறியீட்டை இன்று அறிமுகம் செய்துள்ளார். காவல்துறை மற்றும் அனைத்து துறை எண்கள், கம்ப்ளைன்ட் போர்டல் மற்றும் தீயணைப்பு, குழந்தை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் உதவி என அனைத்து எண்களும் இந்த “QR” -இல் இடம்பெற்றுள்ளது.SHARE

கோதைகிராமம் விசாலாட்சி அம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் சனிக்கிழமை மஹா சனிப்பிரதோஷம் நடைபெற்றது.
இதில் நந்தியம்பெருமானுக்கும், காசிவிஸ்வநாதர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட அழகுமணி தேரில் திருக்கோவிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

ராமன்புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜகோபால்(64) என்பவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார்(62) என்பவரை தனது ஆட்டோவில் ஏற்றி குளச்சலுக்கு சென்று கொண்டிருந்தார். மணவாளக்குறிச்சி அருகே டெம்போவை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியது. இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயகுமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Sorry, no posts matched your criteria.