Kanyakumari

News October 6, 2025

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

image

திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் நேற்று (அக்.5) ரோந்து சென்றபோது கேசவபுரம் கருப்பவிளையில் வைத்து மரம் வெட்டும் தொழிலாளி பிபிஸ்(26) என்பவர் போலீசாரைப் பார்த்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். மேலும் எஸ்.ஐ. சிவசங்கரின் தோள்பட்டையில் இரும்பு கம்பியால் அடித்து உள்காயம் ஏற்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார் பிபிஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News October 6, 2025

மார்த்தாண்டம் அருக பைக் மோதி மூதாட்டி பலி

image

மார்த்தாண்டம் பாட்டவிளை சுகுமாரன் மனைவி சுகுமாரி (81) இன்று காலை மேல்புறம் வங்கிக்கு சென்று பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து, பாகோடு மாவறத்தலவிளை அருகே செல்லும்போது எதிரில் வந்த பைக் மோதியது. இதில் சுகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த அருமனை முரம்புவிளை பிரவின்ராஜ் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

News October 6, 2025

குமரி: NLC நிறுவனத்தில் 1101 காலியிடங்கள்., APPLY NOW

image

குமரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI மற்றும் அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை கண்டிப்பா உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 6, 2025

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் உதவி மையம் துவக்கம்

image

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் உதவி மையம் இன்று முதல் தொடக்கம். கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் மனு எழுதத் தெரியாத பட்சத்தில் இந்த உதவி மையத்தை அணுகினால் கட்டணமின்றி மனு எழுதிக் கொடுத்து உதவி செய்வார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கப்பட்டிருள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் என ஆட்சியர் அழகுமீனா அவர்கள் கூறினார்.

News October 6, 2025

அருமனை: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

image

சிதறால் செட்டி விளையைச் சேர்ந்தவர் கொத்தனார் சுனில்குமார்(41). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனியாக வசித்து வந்த இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. கடந்த அக்.4 அன்று சுனில்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருமனை போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் இருந்த சுனில்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 6, 2025

குமரி: சொந்த நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. குமரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <>இங்கே கிளிக் செய்து<<>> நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News October 6, 2025

கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்பு

image

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு ஸ்கூட்டர் நீண்ட நாட்களாக நின்றது. போலீசார் அதற்கு அபராதம் விதித்தபோது கேரளா கொல்லம் பரவூர் ஷீலாவின் ஸ்கூட்டர் என்பதும், 7 மாதத்திற்கு முன் அது திருட்டு போனதும் தெரிந்தது. நேற்று ஷீலா மார்த்தாண்டம் வந்து ஸ்கூட்டரை திரும்ப பெற்று சென்றார். கொல்லத்தில் திருடிய ஸ்கூட்டரை  மார்த்தாண்த்தில் வைத்து விட்டு திருடன் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர். 

News October 6, 2025

நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

நாகர்கோவிலில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் Business Development Executive பிரிவில் 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும் நிலையில் 20-26 வயதிற்குட்பட்டவர்கள் அக்.17 க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விரங்கள், விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. மேலும், வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News October 6, 2025

குமரியில் பெட்டி பெட்டியாக பறிமுதல்

image

கொல்லங்கோடு பகுதியில் தனியார் மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை போலீசார் ரகசிய கண்காணித்து வந்ததன் அடிப்படையில், அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிரடி படையினர் நடத்திய சோதனையில் 450 மது பாட்டில்கள் மற்றும் ரூ.12000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 6, 2025

குமரி: சட்டவிரோதமாக மது விற்பனை – 450 பாட்டில் பறிமுதல்

image

கொல்லங்கோடு பகுதியில் தனியார் மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை போலீசார் ரகசிய கண்காணித்து வந்ததன் அடிப்படையில், அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து இன்று 5-ம் தேதி அதிரடி படையினர் நடத்திய சோதனையில் 450 மது பாட்டில்கள் மற்றும் 12000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!