India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தக்கலை கேரளபுரத்தை சேர்ந்த தொழிலாளி முத்துக்கண்ணு(60) அக்.8 அன்று இரவு கடையில் பொருட்கள் வாங்க திருவிதாங்கோடு பள்ளி வாசல் அருகில் சென்றபோது அவ்வழியே வந்த பைக் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த முத்துக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு; கொல்லங்கோடு நகராட்சி வார்டு எண் 18,19,20 ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்தில் வைத்தும், ரீத்தாபுரம் பேரூராட்சி வார்டு எண் 10 முதல் 15 வரை ஷாஜன் மஹாலில் வைத்தும், மயிலாடி பேரூராட்சி 8 முதல் 13 வது வார்டு வரை ஆதிலட்சுமி மண்டபத்தில் வைத்தும் மேலும் முன்சிறை, குறுந்தன் கோடு,ராஜகமங்கலத்திலும் நடைபெறும்.

அனைத்து ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு செயலியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இன்று (அக்-9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் கலந்து கொண்டு பாதுகாப்பு செயலியை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி தலைவர் ஆசை தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TN Rights துறையில் பல்வேறு பணிகளுக்கு 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th முதல் பல்வேறு பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் வரை இப்பணிகளுக்கு அக். 14க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும். இத்தகவலை வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

தேசிய அஞ்சல் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் இருந்து அஞ்சலக ஊழியர்கள் பேரணி இன்று குமரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் மரம் நடு விழாவும் இதன் ஒருபகுதியாக நடைபெற்றது.

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<

குமரி மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

நாகர்கோவிலை சேர்ந்த 35 வயது பெண் அக்.7 அன்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். நேற்று (அக்.8) அதிகாலை விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் வைத்து ஓடும் ரெயிலில், தென்காசி பெரியகுளம் தனியார் நிறுவன ஊழியர் விக்னேஷ்(25) அந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் கூச்சலிடவே விக்னேஷை சக பயணிகள் ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்த நிலையில் அவரை கைது செய்தனர்.

குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அரவிந்த் ஜோதி கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு பரவல் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலும் 305 பேர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.டெங்கு காய்ச்சல் காரணமாக மரணம் எதுவும் நடைபெறவில்லை.டெங்கு காய்ச்சல் தடுப்புபணியில் 1250 பேர் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்கரையை சேர்ந்த ஆல்வின் நேற்று மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் வெளியே இருந்த மரப்பலகையின் இடையே பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பாம்புபிடிக்கும் கருவி மூலம் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Sorry, no posts matched your criteria.