Kanyakumari

News October 11, 2025

குமரி: தொழிலாளி அடித்து கொலை; 3 பேர் கைது

image

அருமனை தேவி கோடு பகுதி சமையல் தொழிலாளரான ஷிபு 20 ஆண்டுகளாக கேரள மாநிலம், ஆலப்புழை காயங்குளத்தில் வசித்து வருகிறார். அக்.9ம் தேதி இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விஷ்ணுவின் மகளின் 2 பவுன் தங்கச் சங்கிலியை காணாததால் ஷிபுவின் மீது சந்தேகப்பட்டு விஷ்ணு உட்பட 7 பேர் சேர்ந்து தாக்கியதில் ஷிபு இறந்து போனார். இது தொடர்பாக காயம் குளம் போலீசார் விஷ்ணு அவரது மனைவி அஞ்சனா உட்பட மூன்று பேரை செய்தனர்.

News October 11, 2025

குமரி: டாஸ்மாக் கடையை பூட்டிய பெண்கள்

image

திருவிதாங்கோடு மாம்ப்பிளியா குளம் அருகில் நேற்று மாலை புதியதாக டாஸ்மாக் கடை திறந்து ஊழியர்கள் மது விற்பனையை துவங்கினர். தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களை தூக்கி வீசி கடை ஷட்டரை இழுத்து பூட்டினர். தக்கலை போலீசார் அங்கு வந்து கடையில் இருந்த மதுபாட்டிகளை எடுத்து செல்ல டாஸ்மாக் ஊழியர்களிடம் கூற அவர்கள் மதுபாட்டிகளை எடுத்துச் சென்றனர்.

News October 11, 2025

குமரி: டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

டாஸ்மாக் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை புறக்கணிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வரும் திங்கள் (அக்-13) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

News October 10, 2025

குமரி அரசு வேலை.. 1,450 காலியிடங்கள்! APPLY NOW

image

குமரி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,450 காலியிடங்கள் உள்ளது. <>மாவட்ட வாரியாக பணியிடங்கள்<<>> நிரப்பப்பட உள்ளது. 10th கல்வித்தகுதி உடைய 18 வயது நிரம்பியவர்கள் www.tnrd.tn.gov.in-ல் நவ. 9க்குள் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை. சொந்த ஊரில் அரசு வேலை. உடனே SHARE பண்ணுங்க.

News October 10, 2025

குமரியில் இனி 7 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 தினங்களுக்கு முன் கட்டயமாக அனுமதி பெற வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

களியக்காவிளை: பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

image

களியக்காவிளை அருகே பதம் கோட்டை சேர்ந்த ஜெகதீஷ் குமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர் பீரோவில் இருந்த 90 பவுன் தங்கநகையை திருடிச் சென்றுள்ளனர். நகை திருடிய சம்பவம் ஒரு சில தினங்களுக்கு பின்னர் தான் ஜெகதீஷ் குமாரிக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் நேற்று களியக்காவிளை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 10, 2025

தக்கலை: கூட்டமாக கஞ்சா பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

image

தக்கலை சப் இன்ஸ்பெக்டர் இம்மானுவேலுக்கு பள்ளியாடி பகுதியில் சிலர் கூட்டமாக அமர்ந்து கஞ்சா புகைப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு 11 மாணவர்கள் உட்பட 13 பேர் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ஒரு மாணவரிடம் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 13 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News October 10, 2025

நாகர்கோவில்: பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை

image

தீபாவளி பண்டிகை அக்.20 அன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக நேற்று நாகர்கோவில் ரெயில்வே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், அருள் ஜெயபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரெயில்களில் தீ பிடிக்கும் பொருட்கள், பட்டாசு எடுத்துச்செல்லக்கூடாது.  மீறி எடுத்துச்செல்பவர்கள் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். 

News October 10, 2025

குமரியில் கிராம ஊராட்சியில் வேலை – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக www.tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 10.10.2025 முதல் விண்ணப்பிக்கலாம். (இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்). ஆர்வமுள்ளவர்கள் நவ.09 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். SHARE IT

News October 10, 2025

குமரி: விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சபிக் என்பவர் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!