India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிராம்பு சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கிராம்பு விலை சரிய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ கிராம்பு 1100 ரூபாய் என்று கடந்த மாதம் விலை இருந்த நிலையில் தற்போது அது 900 ரூபாயாக குறைந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கிராம்பு விளைச்சல் அதிகளவிற்கு வரும் என்பதால் கிராம்புகளை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த பைசல்கான்(40), மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ்(27) ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக SP அலுவலகம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டம், குமாரகோயில் அருகே டாரஸ் லாரியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் கார், பைக் உள்ளிட்ட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இதில் பைக்கில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் ஆய்வாளர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரத்துடன் அரசிற்கு தகவல் கொடுத்த, அங்கு பணியில் இருந்த காவலர் சைலஸ் மீது உயர் அதிகாரிகள் பொய் போக்சோ வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். மேலும், போலீஸாரால் தங்களது குடும்பத்திற்கு ஆபத்து உள்ளதாக அவரது குடும்பத்தார் நேற்று(ஜன.22) நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, குற்றங்கள் நடந்த இடங்களை பகுப்பாய்வு செய்து, அவை மீண்டும் நடைபெற வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று(ஜன.22) காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டம் குருந்தன் கோட்டை சேர்ந்தவர் சுரேஷ், 28. இவர் கடந்த 2 மாதமாக கோபிகா என்பவருடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கோபிகா அம்மா வீட்டிற்கு செல்ல முயன்றபோது அவரை செல்ல விடாமல் தடுக்க தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துகொண்டார். இதில் படுகாயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(ஜன.22) உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

அகில இந்திய சித்த மருத்துவ கழகம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு குமரியில் இன்று(ஜன.23) தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். 25ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு தை திருவிழா கடந்த 17ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6வது நாள் நாளான நேற்று(ஜன.22) அய்யா வைகுண்டசுவாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில் கோவை – நாகர்கோவில் பகல் நேர ரெயில் இரண்டு நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இம்மாதம் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து காலை 8:00 மணி புறப்படும் ரயில் விருதுநகர் கரூர் இடையே மாற்றுப் பாதையில் மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவில் கழிவு செய்யப்பட்ட 197 மின்கலன்கள் (Batteries) உட்பட 1205 பொருட்கள் பொது ஏலத்தில் 06.02.2025 அன்று விடப்படுகிறது. மத்திய மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட current Air pollution, water pollution certificates மற்றும் உரிமம் பெற்றவர்கள் மட்டும் அசல் உரிமத்தை காண்பித்து மின்கலன்களை ஏலம் எடுப்பதில் பங்கு பெறலாம் என மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.