India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 7.30 மணிக்கு பரத நாட்டியம், 9.30 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு அய்யப்ப சரிதம் கதகளி ஆகியனவும், நாகர்கோவில் நாகராஜா கோயிலில் காலை 9 மணிக்கு பால்குட அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, உசரவிளை மகாசக்தி இசக்கி அம்மன் கோயிலில் 9 மணிக்கு வில்லிசை, இரவு 8 மணிக்கு அம்மன்பவனியும் நடைபெற உள்ளன.
தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினராக உள்ள தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த குழுவுடன் இன்று இரவு கன்னியாகுமரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் இந்த குழுவுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆய்வு மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு சுற்றுப்பயண விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் தேரூர் அருகே செல்வம் என்ற தூத்துக்குடி செல்வத்தை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரை அவர் தாக்கியதைத் தொடர்ந்து, செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குமரி ஆட்சியரகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மழையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளன.
வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளருமான விஜய் வசந்த் இன்று (நவ.04) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வயநாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பிரியங்கா காந்திக்கு ஓட்டு கேட்டு விஜய் வசந்த் பிரச்சாரம் செய்தார்.
சமீபத்தில் கட்சி ஆரம்பித்த விஜய் ஆட்சியில் பங்கு தருவோம் என கூறினார். இது குறித்து குமரி மாவட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆட்சியில் பங்கு என்பது பாராட்டக்கூடிய விஷயம் தான். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு களப்பணி செய்யாமல் இவ்வாறு கூறுவது ஒரு வகையில் ஆணவமே என்றும், எம்ஜிஆர், என்.டி.ஆர்.,உடன் ஒப்பீடு செய்யாமல் விஜய் விஜயாகவே அரசியல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் கிருஷ்ணனுக்கு சொந்தமான தோட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகில் உள்ளது. நேற்று (நவ.3) இவரது தோட்டத்திற்கு செல்லும் போது ரயில் தண்டவாளம் அருகே ஒரு ஆமை ஊர்ந்து செல்வதைப் பார்த்த கிருஷ்ணன், ரயில் வரும் நேரம் என்பதால் ஓடிச்சென்று ஆமையை எடுத்து ரயில் நிலைய அலுவலர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்து ஆமையை பொய்கை அணையில் விட்டனர்.
* காலை 10 மணி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பத்தாயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுள்ளி விலை கிராம அலுவலரிடம் AICTU மனு கொடுக்கப்படுகிறது. * காலை 10 மணிக்கு இஸ்ரேல் அதிபரை கண்டித்து வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம்.* மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம். * காலை 8 மணி சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் பேரணி.
குளச்சலில் நேற்று (அக்.4) மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காமராஜர் சாலையில் மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த குளச்சல் நகராட்சி Ex.கவுன்சிலர் சதீஷ் பாரதி கட்டிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. வீட்டிலுள்ள டிவி உட்பட மின்சார சாதனங்கள் நாசமானது. அருகில் உள்ள முஸ்லிம் மதராசாவில் இருந்த இன்வெர்டர் பழுதடைந்தது. பல வீடுகளிலும் மின்சார பொருட்கள் பழுதாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாத்தூர் தொட்டிபாலம் அமைந்துள்ள பரளியாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. இதனால் மாத்தூர் தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.