India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤இன்று(அக்.,28) காலை 9 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். ➤காலை 10 மணிக்கு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு தற்போது அரிசி வழங்காததை கண்டித்து அடைக்கா குழி சந்திப்பில் CPIM ஆர்ப்பாட்டம். ➤காலை 10 மணிக்கு தலித்துகளுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்க கேட்டு விசிகவினர் இறச்சகுளத்தில் உண்ணாவிரம்.
இன்று காலையில் இருந்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. மதியத்துக்கு மேல் சுள்ளென வெயில் அடித்தது. தொடர் மழையால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட ரப்பர் மரங்கள் இன்றைய வெயிலில் பால் வெட்டும் நிலையில் காணப்பட்டன. இன்று இரவு, நாளை காலை மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே பால் வெட்டும் தொழில் நடக்கும் என விவசாயிகள் கூறினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டு பலாத்கார வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்கில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி விஜு ராஜ் (42) என்பவர் நித்திரவிளை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.
தமிழக நிதி அமைச்சர் மற்றும் கால நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9 மணிக்கு சுசீந்திரம் பழையாற்றில் புதர்கள் அகற்றும் பணிகளை பார்வையிடுகிறார். இதைதொடர்ந்து, 9:15 மணிக்கு பறைக்கின் காலில் தூர் வாரும் பணியையும், 10:30 மணிக்கு தோவாளை பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களையும் ஆய்வு செய்கிறார். மேரும், 12.30 மணிக்கு பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேறுவதை பார்வையிடுகிறார்.
நடிகர் விஜய்யின் கட்சியான த.வெ.க-வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. மாநாட்டில், அக்கட்சியின் கொள்கை மற்றும் செயல்த்திட்டங்கள் வாசிக்கப்பட்டன. அதில், “மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையை தடுக்க சிறப்பு பாதுக்காப்பு சட்டம் இயற்றப்படும்” என தெரிவித்துள்ளனர். சமீபமாக குமரியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கவிமணி பள்ளிக்கூடம் அருகே உள்ள புனித தெரசா மெட்ரிக் பள்ளி அருகே இன்று (அக்டோபர் 27) அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார். ஹெல்மெட் போட்டிருந்தும் கூட தலையில் வாகனத்தின் டயர் ஏறி இறங்கியது தலை நசுங்கி பலியானார். அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
மத்திய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் அரிசி விலை மூட்டைக்கு ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து நாளை (அக்.27) புதுச்சேரிக்கு பகல் 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து நாளை செல்லாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று (அக்.26) குளச்சலில் 92 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 75.8, அடையாமடையில் 68.5, பெருஞ்சாணியில் 64.2, மேல கோதையாரில் 64, மாம்பழத்துறை ஆறு அணைப்பகுதியில் 63, கீழகோதையாறு அணைப் பகுதியில் 63, புத்தன் அணையில் 62.4, பாலமோரில் 61.4, நாகர்கோவில் 60, குருந்தன்கோட்டில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.27) முதல் குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னைக்கு 60, கோவை 10, மதுரை 10, திருச்சி 10, திருப்பூர் 10 என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி விடுமுறை முடிந்து நவ.1,2,3 தேதிகளிலும் சிறப்பு பஸ் இயங்கும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.