India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் 74,875 பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் பயனாளர்கள் ரேஷன் கடை மூலமாகவும், ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலத்திலும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை 2000 ஆண்டு அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அதன் 25 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை வெளி விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக குமரி மாவட்டம் வரும் அவர் கன்னியாகுமரியில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
வடகிழக்கு மழை தீவிரமடைந்து குமரி மாவட்டத்தில் 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததில் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2040 குளங்களில் 1230 குளங்கள் நிரம்பி உள்ளன. 550 குளங்கள் 50 சதவீதம் தண்ணீருடன் காணப்படுகின்றன என அதிகாரிகள் கூறினர். குளங்கள் நிரம்பியதால் தேரூர், பறக்கை, புத்தேரி உட்பட குளத்து பாசனத்தை நம்பியிருக்கும் மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று(அக்.29) காலை 9.30 மணிக்கு தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆற்றூர் மூவாற்று முகம் மரியா ஆயுர்வேத கல்லூரி, காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறைத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, 10.30 மணி ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்தும் நூதன போராட்டம் நடைபெற உள்ளது.
சுசீந்திரம் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் மாமியார் கொடுமைப்படுத்தியதாக சுருதி (24) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மாமியார் செண்பகவல்லி (50) போலீசாரின் விசாரணைக்கு பயந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நாளை (29.10.2024) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக சிறு கூட்டரங்கில் சிறப்புச் சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் வடசென்னை பூத் கமிட்டி பார்வையாளரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான கே டி பச்சைமால் நேரில் சந்தித்தார். அப்போது, தீபாவளியன்று தனது பிறந்தநாள் வரஇருப்பதை முன்னிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
குமரி மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அண்மையில் பெய்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொலை கைதி சதீஷ் மருத்துவமனையில் இருந்து நேற்று அதிகாலை தப்பி ஓடினார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரை கண்டுபிடிப்பதற்காக 2 தனி படைகளை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அமைத்துள்ளார். அவர்கள் தப்பி ஓடிய கைதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று(அக்.,27) பெய்த மழை அளவு விவரம்: மயிலாடியில் 72.2 மி.மீ., கொட்டாரம்-29.6, நாகர்கோவில்-55, கன்னிமார்-6.8, ஆரல்வாய்மொழி-8.2, பூதப்பாண்டி-20.2, தக்கலை-64.6, குளச்சல்-32, இரணியல்-6.4, ஆனைகிடங்கு-33.8, , திற்பரப்பு-11, முள்ளங்கினாவிளை-28, பேச்சிப் பாறை-38.8, பெருஞ்சாணி-16.6, சிற்றார் I-27.2, சிற்றார் II-4, முக்கடல் 8 மி.மீ என்ற அளவில் மழை பெய்திருந்தது.
Sorry, no posts matched your criteria.