India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று கூறியதாவது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் சீல் வைக்கப்படும். சுகாதாரத்தை பேணிக்காக்க உணவகங்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திறந்த நிலையில் தின்பண்டங்களை வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 405 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 77 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 788 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 412 கன அடி பெருஞ்சாணி அணைக்கு 87 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் உலக பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் தைப் பெருந்திருவிழா நேற்று(பிப்.4) இரண்டாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி அனந்த கிருஷ்ணன் பாமா ருக்மணி புஷ்பக விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#இன்று(பிப்ரவரி 5) காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 62 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தை வழங்க கோரி நாகர்கோவில் உட்பட 6 இடங்களில் காத்திருப்பு போராட்டம் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நடக்கிறது.

“குமரி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சேவைகள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன” என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் கற்கால மனிதர்கள் தங்கள் கற்கருவிகளை கூர்த்திட்டுவதனால் ஏற்பட்ட பாறைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூதப்பாண்டி அருகே தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன், கள ஆய்வாளர் பைசல் ஆகியோர் கலள ஆய்வு மேற்கொண்ட போது 4000 ஆண்டுகளுக்கு முன் கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் கூர்செய்யும் பல குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் குழித்துறையில் காமராஜ் பவன் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதற்காக 16ஆம் தேதி காலை அவர் குமரி வருகிறார்.

திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு இந்து அமைப்பினர் செல்வதைத் தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் பாஜகவினர் 20 பேர் இந்து முன்னணியினர், 6 பேர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் இதர அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

“மத்திய அரசு போதிய நிதியினை ஒதுக்கிய போதிலும், தமிழகத்தில் ரயில்வே உட்கட்டமைப்பு பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன; சென்னை – கன்னியாகுமரி இடையேயான ரயில்பாதையில் உள்ள வேக கட்டுப்பாடு காரணமாக ரயில்களை வேகமாக இயக்க இயலாமல் ரயில்வே நிர்வாகம் உள்ளது; இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி எம்.பி விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களில் மாவட்டத்தில் சாலையோர திறந்தவெளிகளில் இருந்து மது அருந்தியதாக 62 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது. பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.