India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோயில் தைமாத திருவிழாவை ஒட்டி தோவாளை வட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு நாளை (10.02.25) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு விடுமுறை இல்லை . உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக பிப்.22-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை, நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இ.ஆ.ப., இன்று(பிப்.8) பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் பெற்றிருக்கும் 23,810 வாக்குகள் என்பது அதிகார பலத்தையும், பண வலிமையையும் எதிர்த்து செய்த போரில் கிடைத்த வெற்றி. நம் மீதான இருட்டடிப்புகளையும், பொய் அவதூறு பிரச்சாரங்களையும் மீறி நம் மக்கள் நமக்கு கொடுத்த அங்கீகாரம். நமக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு வாக்கும், மாற்றத்திற்கான மக்களின் தேடல். என்று குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு வண்டி(06012) ஏப்ரல் 13,20,27, மே 4,11,18,25, ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கத்தில்(06011) ஏப்ரல் 14,21,28, மே 5,12,19,26 ஜூன் 2,9 16,23,30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. SHARE IT.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். எனது தந்தை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து தற்போது முடிவடைந்து திறப்பு விழா நடந்துள்ளது. அன்று வசந்த குமார் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது என விஜய் வசந்த் MP பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நபார்டு வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாஞ்சில் திருவிழா கண்காட்சியினை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வாங்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026-ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். இதற்கான விண்ணப்பத்தை www.rimcgov.in மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிவித்துள்ளார்.

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மது பானக்கடைகள் மற்றும் எப். எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவான தொகை ஆகும். 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகையை உயர்த்தி வழங்க நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நாளை(பிப்.8) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் செய்தல், மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் ஆகியவை பெறப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படும் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
Sorry, no posts matched your criteria.