India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு “DRUG FREE TN” என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள்.
என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 14 மற்றும் 15 அன்று சுங்கான்கடை புனித சேவியர் பவறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது வருகிறது.
இதனால் வாகன ஒட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட அளவில் சமவெளியில் மாவட்டத்திலே மிகவும் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று (பிப். 13) பேச்சிப்பாறையில் 37°C, 99F என்ற அளவில் வெயில் சுட்டெரித்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 14 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு களியக்காவிளை முதல் பம்மம் வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.பாதசாரிகள் பாதுகாப்பாக சாலை நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தொடர் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து, சமுதாயப் பொறுப்புடன் செயல்பட்டு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் முழு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறோம் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் வேல் முருகன் தூத்துக்குடி தொழிற்பூங்கா அல்லிக்குளம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைத் திட்ட தனித்துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட DSO சுப்புலட்சுமி தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ் விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறலை தடுக்கபோலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். லாயம் பகுதியில் போலீசார்மேற்கொண்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய இரண்டு கார் டிரைவர்களுக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று(பிப்.12) குமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அஞ்சு கிராமம் – வேளாங்கண்ணி குருசடி, பறக்கை – கீழ மணக்குடி, தடிகாரன் கோணம் – மறைமலைநகர், குமரி – அஞ்சு கிராமம், என்ஜிஓ காலனி – அன்னை நகர், அண்ணா பஸ் நிலையம் – அஞ்சு கிராமம் உட்பட 24 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அழகு மீனா நேற்று(பிப்.12) தெரிவித்துள்ளார்.

#இன்று(பிப்.13) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி 69வது நாளாக அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சீரிப்பாறையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு களியக்காவிளை பேருந்து நிலையத்தை கால தாமதமின்றி சீரமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.