India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம், பத்மனாபபுரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் நாளை(12.11.2024) முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா தூய்மை பணியினை இன்று(நவ.,9) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்தனர்.
கட்சிக்குடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாராந்திர ரயில் நாளை(நவ.,10) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு வழக்கமான பாதையில் வராமல் கரூர், திண்டுக்கல் வழியாக திருச்சி வந்து அங்கிருந்து நாகர்கோவில் வரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. Road over Bridge பணி காரணமாக மாற்றுப்பாதையில் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிமுத்து உடன் அவரது தம்பி தளவாய், வன்னிய பெருமாள், பாண்டி, ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐயப்பன் தவிர மற்றவர்கள் இசக்கிமுத்துவின் உறவினர்கள். இசக்கிமுத்துக்கு உதவி செய்ய இவர்கள் அவருடன் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜோபியை கொன்று எரிப்பதற்கு உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
#காலை 10 மணிக்கு குமரி மாவட்ட மகளிர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தக்கலை காவல் நிலையத்தில் போராட்டம். திமுக மகளிரணி அமைப்பாளர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம். #மாலை 4 மணிக்கு மணக்குடி பேருந்து நிறுத்தம் அருகே சுனாமி காலனி குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தர்ணா. #9 மணிக்கு படுகரை பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து கருத்தரங்கு.
குமரி மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள். தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைப்பட்டு, ஒரு குழுவில் 20 மாணவ மாணவிகளும், 5 பேராசிரியர்களும் இடம்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகளில் போதை தடுப்பு கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என்றும் கூறினார்
குமரி முனையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கடல் நடுவே 133 அடி உயரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையை இணைக்க பாலம் அமைக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பாலத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து நடந்து செல்லுமாறு அமைக்கப்பட உள்ளது.
குன்னத்தூர் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 11-ம் தேதி அங்கு பணிகளைத் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இழப்பீடு வழங்காமல் பணி தொடர அனுமதிக்க மாட்டோம் என்று குன்னத்தூரில் நேற்று விஜய் வசந்த் எம் பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் பழுதடைந்த பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்கள் கட்டுவதற்கு நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமை பொறியாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கை-அழகப்பபுரம், முக்கடல், புதுக்குளம் ஈத்தங்காட்டு மடம் பாலங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையிலும் வனவிலங்குகளால் உயிர் இழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 3 பேருக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பயிர் மற்றும் கால்நடைகளால் சேதமடைந்த 14 விவசாயிகளுக்கு 2,93,483 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.