India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் நாகர்கோவில் சாலையில் HELMET அணியாமல், கல்லூரி பெண்கள் முன்பாக உயரக இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் பிடித்தனர். முடியை சீராக வெட்ட வைத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் அவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்கள் விலை விவரம்: அரளிப்பூ கிலோ ரூ.100, பிச்சி ரூ.300 மல்லிகை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.65, சம்பங்கி ரூ.50, முல்லை ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.130, கோழிப்பூ ரூ.40, மஞ்சள் கேந்தி ரூ.60, துளசி ரூ.30, 100 தாமரை ரூ500, மருக்கொழுந்து ரூ.120, கொழுந்து ரூ120, பச்சை ரூ.8 விலையிலும் விற்பனையானது.
தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்கள் விலை விவரம்: அரளிப்பூ கிலோ ரூ.100, பிச்சி ரூ.300 மல்லிகை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.65, சம்பங்கி ரூ.50, முல்லை ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.130, கோழிப்பூ ரூ.40, மஞ்சள் கேந்தி ரூ.60, துளசி ரூ.30, 100 தாமரை ரூ500, மருக்கொழுந்து ரூ.120, கொழுந்து ரூ120, பச்சை ரூ.8 விலையிலும் விற்பனையானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது போன்று இருசக்கர வாகனங்களில் யார் சாகசத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று SP சுந்தரவதனம் இன்று(நவ.,10) தெரிவித்துள்ளார்.
# காலை 10 மணிக்கு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விழாவில் திருப்புகழ் பாமாலை. 6.30 மணிக்கு நாஞ்சில் புத்தனாற்றில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆறாட்டு நடைபெறுகிறது. # காலை 9 மணிக்கு வெள்ளையந்தோப்பு நாராயணசாமி கோவிலில் நாதஸ்வரக்கச்சேரி. இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்து ஆகியனவும் நடைபெறுகிறது. # காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
# வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபிகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. # மாலை 4 மணி வகுப்பு வாரியர் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி அழகிய மண்டபம் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம். # 4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து தாளவிளை பகுதியில் காங்., போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(நவ.,11) திங்கள் கிழமையும், நாளை(நவ.,12) செவ்வாய் கிழமையும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகலுக்குப் பிறகு மாலை நேரத்தில் மழை காணப்படும். அதுவும் அரிதாக மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற புதன்கிழமை முதல் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
விமானப்படையில் பணியாற்றி பின் மேடை நாடகக் கலைஞராகவும், சினிமா, சின்னத்திரை என அனைத்து தளங்களிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு கடமையுணர்வு ஊட்டிய டெல்லி கணேஷ் இழப்பு எனபது நாடக, சின்னத்திரை, சினிமாத்துறையில் பேரிழப்பாகும். தன் இறுதி மூச்சு வரை தேசியத்தை போற்றி பேசி வந்த உன்னதமான நடிகர் என பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் கிறிஸ்டோபர் ஜோபி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை(நவ.,11) தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரியில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை ஏற்கெனவே நடத்தியுள்ளனர். நாளை மீண்டும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரை பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது அனுதாபம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.