Kanyakumari

News November 19, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14 மற்றும் 14.86 அடி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.24 அடி நீரும்,77அடி நீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 64.68 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி 42.65 அடி கொண்ட பொய்கையில் 15.1 அடி நீரும் இருப்பு உள்ளது.

News November 19, 2024

‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமனம்

image

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பெண் போலீசார் அந்த பகுதி கல்வி நிறுவங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பார். இவர்கள் மாணவிகளுடன் தோழியைப்போல பழகுவர். வீட்டில், பள்ளியில் பகிர்ந்துகொள்ள இயலாத பிரச்னைகளை இவர்களிடம் தெரிவித்தால் தீர்வு காண்பர். நம் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(நவ.,18) நாகர்கோவிலில் நடந்த விழாவில் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

குமரி: 74 பேர் கைது! 127 டன் அரிசி பறிமுதல்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.

News November 19, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 .30 மணி சட்டமன்ற பொது கணக்கு குழு குமரியில் கூடுதல் மற்றும் திட்டப் பணிகள் ஆய்வு.#காலை 10 மணிக்கு தக்கலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆலோசனைக் கூட்டம். #கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பாரதி சார்பில் பயிற்சி முகாம்.#காலை 10 மணி குலசேகரம் சந்திப்பில் இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐஎம் சார்பில் வாகனப் பிரச்சாரம். 

News November 19, 2024

குமரி: ரேசன் கடை ஊழியர் வேலைக்கு நேர்முகத் தேர்வு

image

குமரி ரேசன் கடைகளில் காலியாக இருந்த 35 விற்பனையாளர், 6 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வு நவ.,25 to டிச.,2ம் தேதி வரை நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக்கில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் அனுமதி சீட்டினை drbkka.in வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை ‘04652-278257’-ல் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.

News November 19, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு செல்வபெருந்தகை MLA#மார்த்தண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 6.45 மணிக்கு நற்செய்தி கூட்டம. #கிண்ணிக்கண்ணன் விளை சடச்சிப்பதியில் மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு. #மாலை 4 மணிக்கு புவியூர் முத்தாரம்மன கோவிலில் கடல் நீராடுதல். இரவு 8க்கு திருவிளக்கு பூஜை, 9க்கு வில்லிசை, 10க்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை. 

News November 19, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் களியக்காவிளை பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி CPIM குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 5 மணிக்கு ஊரம்பு சந்திப்பில் AAYகுடும்ப அட்டைகளை NPHH அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி CPIM ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

News November 19, 2024

குமரி: மகன் தாக்கியதில் சிகிச்சையில் இருந்த தந்தை பலி!

image

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த தங்கப்பன் – கோசலை தம்பதியின் மகன் ராஜேஷ்குமார்(37). இவர் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தங்கப்பனை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ்குமாரை வெள்ளிச்சந்தை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்கப்பன் நேற்று(நவ.,18) இறந்துபோன நிலையில், ராஜேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.

News November 19, 2024

குமரியில் மாற்றுத்திறனாளிகளும் சென்று வரலாம்

image

கடலில் இறங்கி கால் நனைப்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்க வழி இல்லை. இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் தற்போது குமரி முக்கடல் சங்கமத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்தளம் அமைத்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி நாங்களும் ஆசை தீர கடலில் கால் நனைப்போம் என அவர்கள் கூறினர்.

News November 18, 2024

கோவில் யானை தாக்கியதில் குமரியை சேர்ந்தவர் பலி

image

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் இன்று உயிரிழந்தனர். யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்த யானை பாகனையும் அவரது உறவினர் சிவபாலனையும் திடீரென கோவில் யானை தெய்வானை மிதித்துள்ளது. இதில் இருவரும் உயிர் இழந்தனர். உயிரிழந்த சிசுபாலன் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். சிசுபாலன் உயிரிழப்பு அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!