India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 2 லட்சத்தை 3 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரில், திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30), மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று கூறுகையில், பத்துகாணி பகுதியில் சிறுத்தைகள் நடமாடியதாக கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை. அங்கு பெரிய காட்டுப் பூனைகள் நடமாடி வருகின்றன. கடந்த 6,7 மாதங்களுக்கு முன்பு இது போன்று காட்டு பூனைகள் அந்த பகுதியில் நடமாடியுள்ளன என்றார்.
குமரி எஸ்பி சுந்தர வதனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரி யாரும் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையில் தவறானது செய்தி தவறானது என்று கூறி அவர், பரபரப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார் என்ற நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது. கோதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 48 அடி கொள்ளளவைக் கொண்டது. தொடர் மழையால் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் மலை குன்றுகள் தீவுகளாக இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமாக காட்சி அளிக்கிறது.
குமரியை சேர்ந்தவரான, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்த சரவண சுப்பையா நிலத்தகராறில் 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2021-ல் சென்னை கோர்ட் 7 பேருக்கு மரண, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்க, மேல் முறையீட்டில் 9 பேரும் விடுதலையாயினர். இதை எதிர்த்து டாக்டர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டினை அணுக, தண்டனையை முழுமையாக ரத்து செய்ததை ஏற்கமுடியாது என நேற்று கோர்ட் கூறியுள்ளது.
குளச்சல் கடலில் காணாமல்போன ஆரோக்கிய ஜூடின் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் தொடர்ந்து இடி – மின்னல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் வீட்டில் மனைவியை செல்போனில் தொடர்புக்கொண்டு, இங்கு பயங்கரமாக இடி மின்னல் இருக்கிறது. வீட்டில் உள்ள மின்சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்து வை. நான் விரைவில் கரைக்கு திரும்பி வருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.
#இரணியல் ஒடுப்பாறை நாகரம்மன் கோவில் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் அன்னதானம். #புவியூர் சிவசக்தி ஆலயத்தில் மதியம் 12.30 மணிக்கு சிவசக்தி, குருசாமி செங்கிடாகாரசாமிக்கு தீபாராதனை, மதியம் 2 மணிக்கு சந்தி காத்த பெருமாளுக்கு தீபாராதனை. #உசரவிளை சுவசுடலைமாட சாமி கோவிலில் காலை 8.30 மணிக்கு பரிவார மூர்த்திகள், கோபுர கலசங்கள், மூல மூர்த்திகளுக்கு ளுக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடைபெறும்.
நிதி மற்றும் காலநிலை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 38 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 25,186 மனுக்கள் பெறப்பட்டு அதில் 17 ஆயிரத்தி 986 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் மற்றும் பயன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
#காளிகேசம் காளியம்மன் கோவிலில் காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம். 10 மணிக்கு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். #தோட்டியோடு மவுனகுரு சுவாமி கோவிலில் காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம். மதியம் 12.30 மணிக்கு கோமாதா பூஜை. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு நிலா பூஜை ஆகியன நடைபெறும். #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 5 மணிக்கு ஜெபமாலை. இரவு 7 மணிக்கு கொடியேற்றுதல்.
#காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பார்வதிபுரத்தில் தர்ணா போராட்டம். #போதைக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் சௌமியாபுரம் பள்ளிவாசல் முன்பு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் நடக்கிறது. #மாலை 4 மணிக்கு பார்த்தசாரதி கோவில் சிலை கொள்ளை குறித்து பார்த்தசாரதி கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
Sorry, no posts matched your criteria.