India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்த சிவா என்பவர் அந்த விடுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேசமணி நகர் போலீசார் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி நேற்று சிவாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

உங்க கனவை சொல்லுங்க திட்டத்தில் குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள 4,97,784 குடும்பங்களையும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள மொத்தம் 1,057 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வீடு வீடாகச் சென்று 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை வழங்கி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

வீரப்புலியை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன் (44). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அஜித் என்பவர் சீனி வாங்கிய நிலையில் பழைய தொகை கொடுக்க வேண்டும் என குஞ்சு கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் அவரை கல்லால் தாக்கி கீழே தள்ளியதில் 7 அடி ஆழமுள்ள ஓடையில் குஞ்சு கிருஷ்ணன் விழுந்து காயம் அடைந்தார். இதுதொடர்பாக கீரிப்பாறை போலீசார் நேற்று அஜித் மீது வழக்குப்பதிந்து விசாரணை.

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

புதுக்கடை அருகே முளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அஜின். டெம்போ டிரைவரான இவர் பிக்கப் வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் இருவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கடை அருகே பிக்கப் வாகனத்தில் அவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புதுக்கடை போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நேற்று போலீசார் வழக்குப்பதிவு.

குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வண்டி எண்: 06135 கொண்ட ரயிலானது இன்று (ஜன.23) இரவு 11: 45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட உள்ளது. மேலும், மறு மார்க்கமாக ஜன.26 ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <

தக்கலை அருகே ரெஜின் என்பவர் பழைய கார்கள் விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜன.11 அன்று ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட 14 கார்களில் இருந்து 14 பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்து ரெஜின் கேமரா பதிவுகளுடன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் CCTV காட்சி அடிப்படையில் தக்கலை போலீசார் நேற்று சுபின், செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (22.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.