Kanyakumari

News January 24, 2026

குமரி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 24, 2026

குமரி: விஷம் குடித்து பெண் தற்கொலை

image

கருங்கல் அருகே பாலூர் அரசமூட்டு விளையை சேர்ந்தவர் விஜயகுமாரி (46). கணவருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் விஜயகுமாரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 24, 2026

குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

image

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT

News January 24, 2026

குமரி: பாலியல் வழக்கில் இளைஞருக்கு தண்டனை

image

நாகர்கோவிலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). இவர் 2022ம் ஆண்டு வேலைக்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

News January 24, 2026

குமரி: பொங்கல் விழாவில் தகராறு – இளைஞர் பலி

image

சரலூரைச் சேர்ந்த ரமேஷ், இவரது நண்பர் மணிகண்டன் சேர்ந்து ஜன.15 அன்று நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து முகேஷ் கண்ணன் என்பவரிடம் கேட்க சென்றனர். அப்போது முகேஷ் கண்ணன் அரிவாளால் ரமேஷ் (ம) மணிகண்டனை வெட்டினார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு இரட்டைக் கொலை வழக்காக மாறியுள்ளது.

News January 24, 2026

குமரி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா குமரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News January 24, 2026

குமரி: சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் கொற்றிக் கோட்டிற்கும், கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ராம் சங்கர் குளச்சலுக்கும், குளச்சல் தினேஷ் லியோன் சுசீந்திரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 24, 2026

நாகர்கோவிலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பரக்கத் நகரில் 36 வயது வாலிபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

இன்று (23.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News January 23, 2026

குமரி: ரயில் நேரத்தில் மாற்றம்!

image

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 26 அன்று அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *SHARE

error: Content is protected !!