Kanyakumari

News November 24, 2024

குமரி கடல் பகுதியில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

image

காற்றழுத்த தாழ்வு நிலையின் வெளி சுற்றின் காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை, குமரி முனைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் கடலில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

முன்னாள் எம்எல்ஏ தந்தை உயிரிழப்பு

image

திருவட்டார் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தந்தை ராஜையன் (வயது 88) நேற்று இரவு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் செல்லச்சாமி முன்னாள் எம்பி பெல்லார் மின் உட்பட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

News November 24, 2024

ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு வரும் டிச.14ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் நவ.22 என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை(நவ.25) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இணை இயக்குநர் மகேஷ்வரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேற்று(நவ.23) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 24, 2024

குமரி மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பெண்கள் கைது

image

கருங்கல் திப்பிறமலை ராணுவ வீரர் ஜெர்சன்(28) கடந்த ஜூன் மாதம் அருகில் உள்ள 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றார். புகாரின் பேரில் இவரை போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் புகாரை வாபஸ் பெறக்கேட்டு ஜெர்சனின் தாய் விஜயகுமாரி, சகோதரி ஆன்சிலின் ஆகியோர் மிரட்டியதை அடுத்து இருவரையும் நேற்று(நவ.23) குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

News November 24, 2024

குமரியில் ஒரே நாளில் 4259 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 642 பகுதிகளில் மொத்தம் 1702 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று(நவ.23) நடந்தது. பெயர் சேர்க்க நேற்று மட்டும் 4259 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெயர் நீக்கம் செய்ய 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்றும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், வெள்ளிச்சந்தை பள்ளியில் நடந்த முகாமை ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.

News November 23, 2024

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் பயணிகளுக்கு நற்செய்தி

image

தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும் இரு 3 அடுக்கு ஏசி பெட்டியும் இரு தூங்கும் வசதி பெட்டியும் ஒரு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியும் வரும் நாட்களில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

News November 23, 2024

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

இன்று உருவாக உள்ள காற்றழுத்து தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை பெறும் வாய்ப்பு உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதியில் வரும் திங்கட்கிழமை(நவ.,25) முதல் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News November 23, 2024

குமரியில் இன்று மாலை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

வங்க கடலில் இருந்து ஈரப்பத காற்று குமரி மாவட்ட மலைகளின் மீது மோதுவதாலும், அரபிக் கடல் பகுதியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் தரைக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முறிவை ஏற்படுத்தி இன்று(நவ.,23) மாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் இந்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

தொடர் மழை: மின் பழுது குறித்த இந்த நம்பருக்கு சொல்லுங்க! 

image

மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தால் அவற்றைத் தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. மரக்கிளைகள், தென்னை மர ஓலைகள் போன்ற  பொருள் மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருந்தால் பொதுமக்கள் அவற்றை தொட முயற்சிக்கக்கூடாது. இவை பற்றி மின் வாரியத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். மின் பழுதுகளை 94458 54477, 94458 59502 என கைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என குமரி மின் பகிர்மான மேற்பார்வையாளர் பத்மகுமார் நேற்று கூறினார்.

News November 23, 2024

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணபிக்க அவகாசம் நீட்டிப்பு

image

குமரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. mudhalvarmarnunthagam.tn.gov.in என்ற வெப்சைட்டில் நவ.,30 வரை விண்ணப்பிக்கலாம். டி.பார்ம், பி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் தொடங்கலாம். இதன்மூலம் மக்கள் குறைந்த விலையில் மருந்துகள் பெறலாம் என குமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

error: Content is protected !!