Kanyakumari

News January 27, 2026

குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!

News January 27, 2026

குமரியில் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

குமரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 94458 50829 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். *இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 27, 2026

குமரி: இளைஞர் மீது தாக்குதல்

image

முகிலன் விளையை சேர்ந்தவர் ஹரிஹரன் (28). டிரைவரான இவர் குஞ்சன் விளை என்ற இடத்தில் நேற்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மூன்று பேர் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 27, 2026

குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கன்னியாகுமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

நாகர்கோவில்: தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்

image

நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (44). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து இவர் நேற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் வேலை தொடர்பாக சென்ற போது அவரை மணிகண்டன் (37) ஐயப்பன் (26) ஆகியோர் தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கலைஞர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News January 27, 2026

குமரி: பெண் மீது ஆட்டோ மோதி விபத்து

image

அம்பேற்றன் காலை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தெற்றிகுழி ஜங்ஷனில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது சிதறால் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரது லோடு ஆட்டோ மோதியதில் அஸ்வதி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

குமரி: பெண் மீது ஆட்டோ மோதி விபத்து

image

அம்பேற்றன் காலை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தெற்றிகுழி ஜங்ஷனில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது சிதறால் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரது லோடு ஆட்டோ மோதியதில் அஸ்வதி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

குமரி: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 27, 2026

குமரி: சுசீந்திரம் அருகே ஒருவர் தற்கொலை

image

சுசீந்திரம் அருகே சின்னணைந்தான் விளையைச் சேர்ந்தவர் பிரபு (42). திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. இவர் திருமணமாகாத மன வருத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

குமரி: கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

image

குற்றியாணி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (44). ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். கோதையாறு இடது கரை கால்வாயில் குளிப்பதற்காக சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை தேடிப் பார்த்த போது கால்வாயில் சடலமாக மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!