India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவட்டாறு அருகே செங்கோடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பேபி சுலக்சனா வயது 62. இவரது கணவர் கிறிஸ்டோபர் வயது 66. இவர் சைக்கிளில் பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது, வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மேரிசுஜா(36). இவரது மகன் 5 வகுப்பு படித்து வருகிறார். மேரிசுஜா நேற்று மாலை மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மிடாலக்காட்டில் இருந்து கருங்கல் நோக்கி டூவீலரில் சென்றுக் கொண்டிருந்தார். காக்கவிளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த சொகுசு கார் மேரி சுஜாவின் டூவீலர் மீது மோதியது. இதில், மேரிசுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் இம்மாதம் 9 மற்றும் 16 தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் ஈர நிலம் மற்றும் காடுகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். 9ம் தேதி ஈர நில பறவைகள் கணக்கெடுப்பும் 16ஆம் தேதி காட்டுப் பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற இருக்கிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

நாளை (மார்ச்.8) மாலை 6 மணிக்கு நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இரவு வான்நோக்கல் நிகழ்வு (*Night Sky Watch* ) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு கோள்களின் அணி வகுப்பை தொலைநோக்கி மூலம் கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறக்காம நண்பர்களுடன் போய் கோள்களை பாருங்க மக்களே. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 17ஆம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. தெருக்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் சர்வதேச சுற்றுலாதலமான குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்று(மார்ச் 7) குமரி கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயில் தாக்கத்தினால் குளிர்பானங்களின் விலையும் கிடுகிடுவென உயந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு சார்பில் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அவர்கள் எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 6 நாட்களில் 767 மாணவ மாணவியர் புதிதாக நுழைவு நிலை வகுப்புகளில் சேர்ந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை எழும்பூர் பிரிவில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 9ஆம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படுவது, தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆயவு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.

#இன்று(மார்ச் 7) காலை 10 மணிக்கு பணியாளர்களுக்கு ரூ.730 தினக்கூலி வழங்க கேட்டு குளச்சல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்.#மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி உதவி ஆய்வாளரை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூதப்பாண்டி ஜீவா திடலில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.30 மணிக்கு வங்கியில் போதுமான பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி நாகர்கோவில் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
Sorry, no posts matched your criteria.