India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி ஆட்சியர் அழகு மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“குமரி ஆட்சியரகத்தில் வைத்து வருகிற 29.11.2024 அன்று காலை10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே, மீனவர், மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.
குமரி ஆட்சியரகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டஉதவிகள் கோரி 438 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம் இன்று முதல் நவ.,29ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி பள்ளியில் ‘மாணவர் மனசு’ திட்டம் சார்ந்து விளக்க உரை காலையில் இடம்பெற வேண்டும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் 28 (or) 29ம் தேதி நடத்த வேண்டும். பள்ளியில் பாலியல் புகார் பெறப்பட்டால் 14417, 1098 எண்களில் தகவல் அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
#காலை 10:30க்கு CPIM அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பார்வதிபுரம் பாலம் அருகே கணியான் குளம் இணைப்பு கிராம சாலை குறுக்கே நான்கு வழிச்சாலை அமையும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்ககோரி ஆர்ப்பாட்டம். #காலை 10க்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு வன்முறை எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம். #மாலை 5.30க்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
#குமரி மாவட்டத்தில் இன்று(நவ.,25) காலை 10 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் மருத்துவரை நியமிக்க கேட்டு வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர். #காலை 10 மணி பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டம்.
கன்னியாகுமரி மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு தோட்டம் அருகே கடற்கரையில் இன்று மனித உடல் பாகங்கள் அழுகி சிதைந்த நிலையில் எலும்பு கூடு கிடந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் சவுக்கு தோப்பில் கிடந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 பொங்கலன்று சென்னை & 7 இடங்களில் நடக்கும் “சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்” பங்கேற்க விரும்பும் குமரி மாவட்ட கலைக்குழுவினர், தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை CD/Pen Drive ல் உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி 627007. போன்: 0462-2553890 Email: racct-nu@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“கூடங்குளம் வழக்குகள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு சட்டப்பேரவை தலைவர் சில காவல்துறை அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்; இன்னொரு பக்கம், புதிதாக சம்மன் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்;அரசுக்குத் தெரியாமல் இவையெல்லாம் நடக்கின்றன என்றால், இது என்ன?; விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்
குமரி, கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ் மோன் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோவா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நீர்மூழ்கிக் கப்பல் படகுடன் மோதியது. இதில் ஜெனிஸ் மோன் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் படகுடன் மூழ்கிவிட்டனர். அவர்களை மீட்க இன்று தெற்காசிய மீனவர் தோழமை மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.