India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘TN ALERT’ செயலியின் வழியாக மழை விவரங்களை தெரிந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின் சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*

நாகர்கோவிலில் மளிகை கடை வியாபாரி வேலுவை கல்லால் தாக்கி, எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தோவாளை திருமலாபுரம் பகுதி சேர்ந்த சிவனேஷ் -ஐ போலீசார் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். ஆனால் குற்றவாளி எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் ஜே.எம் கோர்ட்டில் நீதிபதி முன்பு சரணடைந்தார்.

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், “குமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையம் மையமாக்குவதற்கு ஒரு விமான நிலையம் தேவை; இதனால் தமிழ்நாட்டு சுற்றுலாவும் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்” என தெரிவித்துள்ளார். விமான நிலையம் அமைவதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும் எனவும் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் மாசி கொடை திருவிழா மார்ச் 2 முதல் நாளை வரை நடை பெறுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை(மார்ச்11) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.*தெரியாதவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் 575 மக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

குமரி மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*

புனேயிலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று காலை 11.30 மணி அளவில் ரயில் வந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் வந்த போது என்ஜினை அடுத்துள்ள பெட்டியில் ஒரு பை அனாதையாக கிடந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மை சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நாளை(மார்ச் 11) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இத்தேரோட்டத்தில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, ஆட்சியர் அழகு மீனா மீனா, எஸ்பி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.18 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.40 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.92 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 3.02 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 113 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.