India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோட்டாறு புனித சவேரியார் கோவில் தேவாலய திருவிழாவை முன்னிட்டு, புனித சவேரியார் ஆலயம் பகுதியை சுற்றியுள்ள மதுபான கடை எண் 4858, 42A, ரயில்வே ரோடு, கோட்டார் ஜங்சன் மற்றும் மதுபான கடை எண் 4708. 6-194/4, பாறைக்கால் மடை, கோட்டார் ஆகிய கடைகளை 01.12.2024 முதல் 03.12.2024 வரை அடைத்திட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (நவ.28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் மூன்றாவதுநாளான இன்று(நவ.28) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கான சேவைகளும் முடங்கியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: பாலமோர் 4.2, பெருஞ்சாணி மற்றும் குழித்துறை 2.4, களியல் 2.2, கோழி போர் விளை 2.2, பூதப்பாண்டி 1.2, முக்கடல் 1.6, நாகர்கோவில் 1, ஆனைக்கிடங்கு 1.4, சிவலோகம் 2, புத்தன் அணை 1.8, மாம்பழத்துறை ஆறு 1, தக்கலை 2, குளச்சல் 2 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது.ய
குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, நவீன தீவிர சிகிச்சை பிரிவுடன் தற்போது இயங்கி வருகிறது. மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும் குழந்தைகளுக்காக 35 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் 5 மருத்துவனைகளின் குழந்தை பிரிவு பயிற்சிமையமாகவும் செயல்படுகிறது.
குமரி அரசு மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தாய்ப்பால் வங்கி உள்ளது. இங்கு தற்போது 6 லிட்டர் தாய்ப் பால் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். இது தவிர நூலகமும் உள்ளது. இதில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் பங்கு, சிகிச்சை முறைகள் தொடர்பான பல புத்தகங்கள் உள்ளன.
குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்., பிரமுகர் அனிதா, சென்னையில் நேற்று(நவ.,27) கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ஆவடி பகுதி சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியதாக, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அனிதாவை கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கு 96 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அரங்கில் வழங்கப்பட்டது. இந்த பணியாணையை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் இன்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் பயிற்சிக்காக சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கடை பகுதியில் போதை ஊசி கஞ்சா போன்றவைகள் வைத்திருந்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரியர் செயலி மூலம் போதை பூசி, போதை சாக்லேட் மற்றும் மாத்திரைகள் வாங்கியதாக தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
புதுக்கடை போலீசார் நேற்று வெங்கடேஷ் என்பவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது மகன் திருநாவுக்கரசு(20) கஞ்சா, போதை ஊசி போன்றவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இடுவாக்கரை ஜான் கிறிஸ்டோபர், நித்திரவிளை ஆகியோரிடமும் விசாரணை நடத்தபட்டது. திருநாவுக்கரசிடமிருந்து 30 போதை ஊசி, 76 மாத்திரைகள், 22 போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
குமரி கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2.12.2024 காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில், குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து பயன் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.