Kanyakumari

News December 1, 2024

24 குக்கிராமங்களுக்கு ரூ.7 கோடியே 6 இலட்சம் செலவில் குடிநீர் வசதி

image

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 24 குக்கிராமங்களுக்கு ரூ.7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி செய்யப்பட உள்ளது என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

இளம்பெண் இரவில் எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா

image

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை எஸ்டிமாங்காடு பகுதியை சேர்ந்த தனது காதல் கணவன்.லிஜினுக்கு நாளை இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதை தடுத்து தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கடலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். பிரியதர்ஷனி நேற்று(நவ.30) இரவு நாகர்கோவில் எஸ்பி அலுவலகம் முன்பு இரவில் திடீர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றார்.

News November 30, 2024

நாகர்கோவில் – கச்சிகுடா ரயில் 4 மணி நேரம் தாமதம்

image

நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவுக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கச்சிகுடா செல்வது வழக்கம். நாளை டிச.1ம் தேதி இந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக காலை 4.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீரின் வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 310 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 188 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 295 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News November 30, 2024

ஓக்கி புயல் குமரியை தாக்கி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடலில் உருவான ஒக்கி புயல் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இந்த புயல் தாக்கி இன்றுடன்(நவ.,30) 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒக்கி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் உயிர் இழந்ததுடன், காணாமலும் போயினர். இப்புயலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியதுடன், விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

News November 30, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு அரசு ரப்பர் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.காலை 10:30 மணிக்கு உபியில் இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் படுகொலையை கண்டித்து குமரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.#மாலை 5 மணிக்கு திட்டுவிளை பேருந்து நிலையம் முன்பு சிபிஐ எம்எல் ரெட் ஸ்டார் சார்பில் தெருமுனை கூட்டம்.

News November 30, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணக்கு நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24ஆவது குமரி மாவட்ட மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பங்கேற்பு.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள அரங்கில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் குற்றவியல் முப்பெரும் சட்ட திருத்தம் 2023 விளக்க உரை.#மாலை 6 மணிக்கு புனித சவேரியார் ஆலய திருவிழா கூட்டம்.

News November 30, 2024

மார்பகப் புற்றுநோய் கருவி வாங்க தீர்மானம்: குமரி மேயர்

image

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், மார்பக புற்றுநோய் பரிசோதனை கருவி வாங்க மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் மகேஷ்,மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 934 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 42 பேருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

News November 30, 2024

குமரியில் கஞ்சா விற்பவர்களுக்கு துணை போகிறதா போலீஸ்?

image

குமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் நேற்று(நவ.,29) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கலெக்டரிடம் மீனவர்கள், “கடற்கரை கிராமங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து புதுக்கடை போலீசில் தகவல் கொடுத்தால், போலீசாரே குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த கும்பல் தகவல் கொடுத்தவர்களை மிரட்டுகிறது. இப்படி இருந்தால் போலீசுக்கு எப்படி பொதுமக்கள் தகவல் அளிப்பார்கள்”என்றனர்.

News November 29, 2024

குமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு STRICT உத்தரவு!

image

பள்ளி மாணவர்கள் சீருடையில் பென்சில் பிட், டைட்பிட், லோ ஹிப் கூடாது. பெல்ட், ஷூ அணியலாம். கை கால் நகம், தலைமுடி சரியாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். மீசை மேல் உதட்டை தாண்டக்கூடாது. குளித்து தலைவரி, அழுக்கில்லாத சீருடையுடன் பள்ளிக்கு வரவேண்டும். கைகளில் பேண்ட், கயிறு, கம்மல், மூக்குத்தி, செயின், அணிந்து வரக்கூடாது போன்ற விதிகளை கடைபிடிக்க குமரி மாவட்ட பள்ளிகளுக்கு CEO உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!