Kanyakumari

News December 2, 2024

மத்திய அரசை வலியுறுத்திய குமரி எம்.பி

image

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தின் அலுவலகம் இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் 1000 கோடி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்; மத்திய அரசு நிபுணர் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும்” என எம்.பி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

News December 2, 2024

இன்று முதல் குமரி வரை செல்லும் நெல்லை ரயில்!

image

நெல்லை – நாகர்கோவில் பயணிகள்(பாசஞ்சர்) ரயில் இன்று(டிச.,2) முதல் அடுத்த 6 மாதங்களுக்கு குமரி வரை இயக்கப்படவுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள் இன்று தொடங்கவுள்ளதால் அங்கு நிறுத்தப்படும் ரயில்களை குமரி வரை நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் 6 மாதங்களுக்கு குமரி முனை வரை நீட்டிக்கப்பட்டுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 2, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 307 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 225 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 310 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று(டிச.,1) பேச்சிப்பாறை அணைக்கு 201 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 2, 2024

நாகர்கோவில் to சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து!

image

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் அதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று(டிச.,2) காலை புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து 2 மணி அளவில் சென்னை புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

News December 2, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,2) காலை 9 மணி கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவரை நியமிக்ககோரி 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம். #மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலை பளு நெருக்கடியை குறைக்ககோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம். #மாலை 5.30 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உறுதியேற்பு நடக்கிறது.

News December 2, 2024

குமரியை சேர்ந்த 2 பெண் கைவினை கலைஞர்களுக்கு விருது!

image

தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் செய்த கன்னியாகுமரியை சேர்ந்த 2 பெண் கைவினைக் கலைஞர்களுக்கு, பூம்புகார் மாவட்ட ‘கைத்திறன் விருது’ வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜெயக்கு ரூஸிடம் பயிற்சி பெற்ற ஜெஸி, சிவகுமாரி ஆகிய பெண் கைவினைக் கலைஞர்களுக்கு அமைச்சர் அன்பரசன் விருதினை வழங்கினார். ஒரு வாழ்த்து சொல்லலாமே!

News December 1, 2024

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குமரி எஸ்.பி அறிவுரை

image

இருசக்கர வாகனமானது இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடியது. இதில் மூன்று நபர்கள் பயணிக்கும் போது வாகனத்தின் மொத்த எடையானது (Laden weight) நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகரிக்கிறது. இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. மோட்டார் பிரிவு 194 C மற்றும் 194 D ன் படி மூன்று மாத காலம் வரை தகுதி நீக்கம் செய்யுமாறு குமரி எஸ். பி சுந்தரவதனதால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 1, 2024

குமரியில் விசைப்படகு கடலுக்கு செல்ல அனுமதி

image

புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கசெல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நாளை(டிச.2) முதல் அனைத்து விசைப்படகுகளும் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும், மின்வளத்துறை அறிவுறுத்தலின் படி தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் 5 நாட்டிக்கலுக்குட்பட்ட கடல் பகுதிகளில் தொழில் செய்யவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

News December 1, 2024

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு டிச.2 மற்றும் 3ஆம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் திருவிழாவை காண வருவோர் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News December 1, 2024

கன்னியாகுமரி மாவட்ட முக்கிய இன்றைய நிகழ்வுகள்

image

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2ம் நாள் மாநாடு இன்று காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தடிக்காரன் கோணம் சந்திப்பில் வனத்துறை வேலி அமைத்து வைத்துள்ள விளையாட்டு மைதானத்தை மீண்டும் விளையாட்டு மைதானமாக மாற்ற வலியுறுத்தி பாஜக மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. அதேபோல் குருசு மலை பகுதிக்கு மின் இணைப்பு வழங்க கோரி ஆறுகாணி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!