India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவும், தமிழக பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி கரூரில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும். திமுக மீது அதிருப்தி தெரிவித்து வரும் த.வெ.க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியில் பங்கு பெறலாம். இல்லையென்றால் ஓட்டுகளை பிரிக்கும் கட்சியாக இருக்கும் என கூறினார்.

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

மங்களூர் – கன்னியாகுமரி பரசுராம் விரைவு ரயில் (வண்டி எண் 16649) மார்ச் 28 அன்றும் கன்னியாகுமரி – மங்களூர் பரசுராம் விரைவு ரயில் (வண்டி எண் 16650) திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே மார்ச் 29 அன்றும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. குமரி மாவட்டத்தில் 122 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 22 ஆயிரம் மாணவ மாணவியர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 தேர்வு மையங்களும் நான்கு தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் மூன்று தனி தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 28.3.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 22,022 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் சிறப்பான முறையில் அனைத்து மாணவர்களும் தேர்வை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், படித்ததை நினைவுடன் எழுத கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நெய்யாற்றின் கரை பாறசாலை இடையே பாலம் வேலை நடைபெறுவதால் நாளை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் நாகர்கோவில் டவுன் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. 29ஆம் தேதி குருவாயூர் – நாகர்கோவில் டவுன் இந்த ரெயில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட ரப்பர் வாரிய அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் ரப்பர் நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கும் தனியார்கள் ரப்பர் வாரியத்திடம் பதிவு செய்து முறையான அங்கீகாரம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ரப்பர் மரக்கன்றுகள் மானியம்பெற விரும்பும் விவசாயிகள் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் நாற்றங்கால் பண்ணைகளில் மட்டும் கன்றுகளை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 27) 28.90 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.75 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 20 வினாடிகளுக்கு ஒருமுறை 0.8 முதல் 0.9 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே இன்று(27ஆம் தேதி)அலைகளின் தாக்கம் காணப்படும் என்பதால் கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் சார் சேவை மையம் நேற்று தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.