Kanyakumari

News December 5, 2024

பழங்குடியினருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்: குமரி கலெக்டர்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயத் தொழிலாளர்கள் மேம்பாடு அடையும் பொருட்கள் விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படித்திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

News December 5, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,5) காலை 9 மணிக்கு கீரிப் பாறையில் தொழிலாளர்கள் மருத்துவர் நியமிக்க கோரி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். #காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.#காலை 10 மணிக்கு CPIM சார்பில் குளப்புரம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சித் தலைவரை கண்டித்து சத்தியாகிரக போராட்டம்.

News December 5, 2024

பாஜகவின் பிரித்தாலும் நரி தந்திர சாயம் வெளுத்து போனது: MLA

image

ராஜேஷ்குமார் எம்எல்ஏ நேற்று(டிச.,4) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சம்பாலில் உயிரிழந்தவரின் குடும்பங்களை பார்க்க சென்றபோது சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதன் மூலம் பாஜக, RSS-ன் பிரித்தாலும் நரி தந்திர சாயம் வெளுத்து போனது. அரசியல் சாசனத்தை காத்திட ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.

News December 5, 2024

குமரி: முருகன் கோயிலுக்கு காவடி எடுக்கும் P.W.D & போலீசார்!

image

நாட்டில் அணை, குளம் ஏரி, கால்வாய் அனைத்தையும் பராமரிப்பது பொதுப்பணித்துறையினர். எனவே குமரியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க அந்த துறையை சேர்ந்தவர்கள் காவடி தூக்கும் பழக்கம் மன்னராட்சி காலத்திலிருந்து இருந்ததது. அந்த வகையில் டிச.,13ஆம் தேதி கார்த்திகை மாத கடைசி வெள்ளி கிழமையை ஒட்டி பொதுப்பணித்துறைய & போலீசார் காவடி எடுத்து குமாரகோவில் முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். SHARE IT.

News December 4, 2024

கேரளப் பகுதியில் மண் சரிவு NGL-TVM ரயில் போக்குவரத்து பாதிப்பு

image

நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் கேரள மாநில பகுதியில் உள்ள பாலராமபுரத்தில் திடீரென இன்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதையின் மேல் பகுதியில் உள்ள மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதையில் விழுந்த மண் அகற்றப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

News December 4, 2024

பகவதி அம்மன் கோவில் இடம் விவகாரம்; உயர்நீத மன்றம் அதிரடி

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 45 சென்டு இடத்தை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி பேரூராட்சியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடம் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

News December 4, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது

image

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புகள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்து போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

News December 4, 2024

குமரியில் இந்த ஆண்டு கஞ்சா வழக்குகள் எத்தனை?

image

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்பி சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரையிலும் 150 கஞ்சா வழக்குகள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது கஞ்சா செடி வளர்த்த வழக்கில் கைதாகி உள்ள இரண்டு பேரின் கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

News December 4, 2024

மத்திய அரசுக்கு குமரி எம்பி கடிதம்

image

நகர்ப்புற விவசாயிகளுக்கு பல வங்கிகள் விவசாய கடன் வழங்க மறுப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எதில், அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சமற்ற முறையில் நிதி உதவி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 4, 2024

குமரி அருகே ரயில் மோதி முதியவர் பலி

image

மும்பையில் இருந்து குமரிக்கு இன்று காலை 7-30 மணிக்கு ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் வந்த கொண்டிருந்தது. இந்த ரயில் அகஸ்தீஸ்வரம் அருகே விஜயநகரி என்ற இடத்தில் செல்லும்போது அவ்வழியே சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில் மோதி அதே இடத்தில் தலை சிதைந்து உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!