Kanyakumari

News February 4, 2026

குமரி: ஒரே நாளில் புகையிலை விற்பனை தொடர்பாக 21 வழக்குகள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், மாவட்டம் முழுவதிலும் 8 DSP க்கள் 21 இன்ஸ்பெக்டர்கள் 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை விற்பனை செய்ததாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டத்தில் தொடரும் என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

குமரி: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

கன்னியாகுமரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

News February 4, 2026

குமரி: இனி பட்டா பெயர் மாற்றம் செய்வது ஈஸி…!

image

குமரி மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். Share பண்ணுங்க.

News February 4, 2026

குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

image

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News February 4, 2026

குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

image

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News February 4, 2026

குமரி: லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

image

பேச்சிப்பாறை அருகே மூக்கறக்கல் பகுதியில் நேற்று மாலை மரத்தடிகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தடியுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அகில்குமார் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 4, 2026

குமரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

image

ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கிஷோர்(19). இவர் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

குமரி: FIR பெறுவதில் சிக்கலா.? SP புதிய தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், FIR உங்கள் உரிமை குறித்த போஸ்டர் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புகார்தாரருக்கு FIR நகலை இலவசமாக பெரும் உரிமை இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7708239100 என்ற பப்ளிக் ஃபீடுபேக் சென்டர் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

News February 3, 2026

குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கன்னியாகுமரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 3, 2026

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!