Kanyakumari

News December 7, 2024

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: 17 ஊராட்சிகள் தேர்வு

image

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 17 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராமாபுரம் குலசேகரபுரம் கனியாகுளம் பள்ளந்துறை பறக்கை, இறச்சகுளம், காட்டுப்புதூர், பீமநகரி, தலக்குளம், தென்கரை, ஆத்திவிளை, கண்ணனூர், சுருளோடு, மருதன்கோடு, மஞ்சால மூடு, பாலூர், குளப்புரம், சூழால் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

News December 7, 2024

குமரி வீராங்கனைக்கு SDPI தலைவர் பாராட்டு

image

காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், 100 மீட்டர் தடை தாவலில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் குமரி மாவட்டம் கடையாலுமூடுவை சேர்ந்த மாணவி ஷமீஹா பர்வீன். மாணவி ஷமீஹா பர்வீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும என SDPI தலைவர் நெல்லை முபாரக் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 456 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 75 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 663 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 420 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 358 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 159 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 7, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரி மாவட்டத்தில் இன்று(டிச.,7) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவர்களை நியமிக்க கோரி 12வது நாளாக உண்ணாவிரதம். #பிற்பகல் 2:30 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். #மாலை 5.30-க்கு கட்டையன்விளை மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

News December 7, 2024

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருஏடு வாசிப்பு வருகிற 22-ஆம் தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி தினமும் திருஏடு வாசித்து விளக்கவுரை ஆற்றப்படுகிறது. 15வது நாளான டிச.,20ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 17வது நாளான 22ஆம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது.

News December 7, 2024

குமரியில் இந்த ஆண்டு 24 பேருக்கு HIV தொற்று!

image

2023-ல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டி15,700 பேருக்கு H.I.V. தொற்று பரிசோதனை நடத்தியதில் 60 பேருக்கு தொற்று இருந்தது. நடப்பாண்டியில் 17,400 பேருக்கு பரிசோதனை நடத்தியதில், 24 பேருக்கு H.I.V. இருந்தது. குமரியில் மொத்தமாக 6,800 பேருக்கு H.I.V. தொற்றுள்ளது. இதில் 4,800 பேர் முறையாக சிகிச்சை பெறுகின்றனர். கல்லூரி மாணவர்கள் சிலரும் இதில் அடங்குவர் என தகவல்.

News December 7, 2024

கன்னியாகுமரி – ஹவுரா ரயில் 14ஆம் தேதி ரத்து!

image

கன்னியாகுமரியில் இருந்த ஹவுராவுக்கு வாரம்தோறும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. கிழக்குக் கடற்கரை ரயில்வே குர்தா பிரிவில் 3வது ரயில் பாதை பணி காரணமாக இம்மாதம் 14ஆம் தேதி குமரியில் இருந்து ஹவுரா புறப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதை போன்று 16ஆம் தேதி ஹவுராவிலிருந்து குமரி வரும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

ரயில்வே தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

image

ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான கிளைத்தேர்தல் கடந்த மூன்று நாளாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் SRMU, DREU, DRKS, SRES ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 1120 வாக்காளர்களில் இன்றுடன் முடிந்த வாக்குப்பதிவில் மொத்தம் 912 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டதிருவனந்தபுரம் இன்று கொண்டு செல்லப்பட்டன.

News December 6, 2024

குமரி பெண் அதிகாரிக்கு மூன்று ஆண்டு சிறை

image

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அமலா ஜெஸி ஜாக்குலின். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் AEE ஆக நாகர்கோவிலில் பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக VACவழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நாகர்கோவில் CJM அமலாஜெஸி ஜாக்குலின் மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் இன்று விதித்தார். அமலா ஜெஸி ஜாக்குலின் தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறார்

News December 6, 2024

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறும் குமரி வீராங்கனை

image

கடையாலு மூடை சேர்ந்தவர் அப்பா முஜீப் இவரது மகள் சமிஹா பர்வீன். மலேசியாவில் நடந்த காது கேளாதருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளி, தங்கம் பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையைில், வரும் 9ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு தமிழகம் சார்பில் வரவேற்பு அளிக்க இருப்பதாகவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!