Kanyakumari

News February 8, 2026

குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு..!

image

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT

News February 8, 2026

குமரி: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

image

குமரி, காடேற்றியை சேர்ந்தவர் சந்திரன் (66). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மனைவி உயிரிழந்தார். இதனால் வேதனையில் இருந்து வந்த சந்திரன் நேற்று அவரது மனைவி கல்லறையின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு.

News February 8, 2026

குமரி: சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி

image

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்த ஏசுபாலன் 2 பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுப்பதற்காக சென்றார். சங்கு எடுத்து கொண்டிருக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு.

News February 7, 2026

குமரியில் இரவு காவல் ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (07.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 7, 2026

குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 7, 2026

குமரி: அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க…

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

image

குமரி மாவட்டத்தில் சுமார் 274 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.

News February 7, 2026

குமரி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

image

குமரி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE IT

News February 7, 2026

குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

குமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 7, 2026

குமரி: மாமனார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன்

image

நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி விபின்லால் – அஸ்வினி. இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. இதனால் பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்த நிலையில் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த விபின் தனது நண்பர்கள் 6 பேருடன் தோப்பூரில் அவரது வீட்டிற்கு சென்று அஸ்வினி, அவரது தந்தை (ம) மைத்துனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் விபின்பாலை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!