India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்து ஒரு வாரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை வாய்ப்பு கிடையாது. வறண்ட வானிலையே காணப்படும். பொதுவாக டிசம்பர் மாதத்தில் இருந்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைய ஆரம்பித்து விடும். வர இருக்கும் ஒரு வாரத்திற்கு பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வறண்ட வானிலையே காணப்படும். நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் பனி பொழிவு காணப்படும் என குமரி தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பனை மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. அதனை பாதுகாக்கும் முயற்சிகள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பனை மரங்களில் 34 வகை மரங்கள் இருப்பதாக விவசாய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்,பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈஞ்சம் பனை, ஈழப்பனை, சீமைப்பனை, நிலப்பனை, அலகுப்பனை உள்ளிட்ட வகைகள் இதில் அடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் இன்று காலை சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சைத் அலைகள் எழும்பி வீசின. இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றுவது மிகவும் ஆபத்தானது மற்றும் தீ விபத்திற்கு காரணமாகவும் அமைகிறது. எனவே ஐயப்பன் பக்தர்கள் புனித யாத்திரை பயணத்தில் ரயில் பெட்டிகள் கற்பூரம் ஏற்ற வேண்டாம் எனவும், உங்களுடன் பயணிக்கும் சகப் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று பார்வதிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அருண்ராஜ் ( 27) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவருக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மட்டும் நாகர்கோவிலில் போக்குவரத்து விதி மீறிய 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (டிச.15) காலை 10 மணி ஆலன்விலை பங்கு பேரவை சார்பில் ஆளன் அன்னைநிதி நிதி நிறுவனத்தில் பணத்தை திருப்பி கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சார்பில் பாலன்விளை படிப்பகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல்,குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று (டிச.14) நடைபெற்றது. இதில் 2231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 1644 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.13,55,35,356 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒட்ஜொ; நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர், எதிர்மனுதார் பங்கேற்றனர்.
கட்சிக்குடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் கட்சிக்குடா நாகர்கோவில் ரயில் 4 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக டிச.14 நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கட்சிக்குடா புறப்பட்டு செல்லும் ரயில் 3 முதல் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,விருதுநகர், ராமநாதபுரம்,தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம் 11 ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சமூக வலைதள அணி தென்மண்டல பொறுப்பாளராக குமரி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க சமூக வலைதள அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.
குமரி, மேல சூரங்குடியை சேர்ந்தவர் பிரவீன், கடந்த 11ம் தேதி கோணம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பிரவீனை கொலை செய்ததாக அவரது நண்பர் கார்த்திக் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் மது வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.