Kanyakumari

News December 22, 2024

குமரி மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. “இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 22, 2024

பூம்புகார் படகுகளில் திருவள்ளுவர் குறித்த விபரங்கள்

image

குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்று செல்லும் படையில் திருவள்ளுவர் குறித்த தகவல்களை பொறித்திட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

News December 22, 2024

குமரி: தளவாய் சுந்தரம் அறிக்கை வெளியீடு

image

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இன்று(டிச.22) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இம்மாதம் 24ஆம் தேதி நாகர்கோவில் வடசேரியில் உள்ள MGR உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது; இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் கழக நிர்வாகிகள் அணி திரண்டு வர வேண்டும்” என  கூறியுள்ளார்.

News December 22, 2024

குமரியில் இன்று மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

image

இருதிசை காற்று சந்திப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (டிச.22) மாலை, இரவு நேரத்தில்  மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய இடங்களில் மேக கூட்டங்கள் உருவாகி அதன் நகர்வை பொறுத்து ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 22, 2024

காமராஜருக்கு மரியாதை செய்த புதிய காங்கிரஸ் நிர்வாகி

image

அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் மற்றும் பணியாளர் காங்கிரஸ் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள J.மரிய ஜெயசிங் இன்று (டிச.21) காமராஜர் மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் R.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News December 22, 2024

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அறிவிக்கை

image

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மனித கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை மாநகராட்சி பகுதியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 22, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.24 & 31 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் (06039/06040) விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும். செய்தியை பகிரவும்!

News December 22, 2024

திருவள்ளூர் சிலை விழா சிங்கப்பூர் அமைச்ச பங்கேற்பு

image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை வருகிற டிச.30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதலமைச்சர் தலைமை வகிக்கிறார். அன்று கண்ணாடி பாலம் திறப்பு, பூம்புகார் கைவினைப் பொருள் அங்காடித் திறப்பு, திருக்குறள் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.

News December 22, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

தாம்பரம் – குமரிக்கு ரயில் (06039/06040) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24 & டிச.31 தேதிகளில் தாம்பரத்தில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 12.15 மணிக்கு குமரிக்கு சென்று சேரும். தாம்பரம்,செங்கல்பட்டு,மேல்மருவத்தூர்,விழுப்புரம்,விருதாச்சலம்,திருச்சி,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர்,சாத்தூர்,கோவில்பட்டி,திருநெல்வேலி,வள்ளியூர்,நாகர்கோவில்,கன்னியாகுமரி என்கிற வழியில் பயணிக்கிறது.

News December 22, 2024

ரீல்ஸ் மோகத்தில் கோர்ட்டில் வீடியோ எடுத்த 2 பேர் மீது வழக்கு

image

நேற்று(டிச. 21) நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டின் மேல் பகுதியில் நின்று 2 பேர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். உடனே போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது ‘ரீல்ஸ்’ மோகத்தில் கோர்ட்டில் வீடியோ எடுத்ததாககூறினர். இருவர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!