Kanyakumari

News December 21, 2024

குமரி: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை!

image

குமரி அம்மமுத்து 1991 – 96ல் அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 2010-ல் நெல்லை IOB வங்கி மேலாளர் உடந்தையுடன் ரூ.2,42,37,431 கடன் பெற்று மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இது தொடர்பாக மேலாளர், அம்மமுத்து உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று மதுரை சிபிஐ கோர்ட் அம்மமுத்து உட்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை, ஒருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News December 21, 2024

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தெலங்கானா முதல்வர்

image

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா டிச.,22, 23 தேதிகளில் நடக்கிறது. 22-ம் தேதி கல்லூரி, திருச்சபை மாணவ மாணவிகள் பங்கு பெறும் குழுபாடல் போட்டி நடக்கிறது. 23-ம் தேதி நெடிய சாலை முதல் அருமனை வரை கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு, மேளதாளத்துடன் ஊர்வலம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடக்கிறது. தொடர்ந்து பிரமுகர்கள் பங்கேற்கும் சமூகநல்லிணக்க மாநாடு நடக்கிறது.

News December 21, 2024

சுவாமிதோப்பு வைகுண்டர் கோயிலில் திருக்கல்யாணம்

image

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று(டிச.,20) நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யா வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டு சீர் வரிசைகளை வழங்கினர். தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

News December 21, 2024

மேலும் ஒரு மைல் கல்! குமரியின் அழகிய PHOTO

image

கன்னியாகுமரியில், மேலும் ஒரு மைல் கல்லான கடல் நடுவே கண்ணாடி பாலம் வேலை இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. எந்த தருணத்திலும் திருவள்ளுவர் சிலையை தடையின்றி பார்க்கும் விதமாக, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கனவான விவேகானந்தர் பாறைக்கும் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் பணிகள் முடிவடையும் நிலையில், அதன் அழகிய தோற்றம் வெளியாகி உள்ளது. SHARE IT.

News December 21, 2024

அமித்ஷா பொம்மை எரிப்பு: விசிகவினர் 10 பேர் மீது வழக்கு

image

பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவப் பொம்மையை எரித்ததாக, விசிக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாஸ், வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் ஜானி, தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் உட்பட 10 பேர் மீது பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று(டிசம்பர் 20) வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 21, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,21) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசி நம்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில், மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 24வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#மாலை மணிக்கு தக்கலை தூய எலிசியா ஆலய வளாகத்தில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. MLA தாரகை பங்கேற்கிறார்.

News December 21, 2024

தடகள போட்டியில் குமரி மாணவிக்கு 2 தங்க மெடல்!

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மையம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 34-வது தடகள போட்டிகள் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில், குமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தனுஷா 100 மீட்டர் ஓட்டம் போட்டியிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

News December 21, 2024

குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தால் நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்ட வன சரணாலய பகுதிகளில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியானதால் எந்தவித அனுமதியும் இன்றி நுழைப்பவர்களால் மனித உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துமீறி நுழைப்பவர்களை பிடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

News December 20, 2024

குமரி வந்த அமைச்சர் ராஜேந்திரனுக்கு வரவேற்பு

image

குமரிக்கு வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகர மேயருமான ரெ. மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு முன்னிலையில் குமரி பேரூர் கழக செயலாளரும்குமரி பேரூராட்சி மன்ற தலைவருமான குமரி ஸ்டீபன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 20, 2024

#StatueOfWisdom – தமிழக முதல்வர் அறிவிப்பு

image

சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயர சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom – ஆக கொண்டாடுவோம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!