India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் ஞாயிறு வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் கூட்டம் நேற்று காலை முதலே அலைமோதியது. மது பிரியர்கள் போட்டிக் போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். இதன் மூலம் சாதாரண நாட்களைவிட பன்மடங்கு விற்பனை அதிகமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை ஆயுதப்படைப் பிரிவு சார்பில், ரூ.100 – ரூ.3,500 வரை பட்டாசுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் எத்தனை வகை பட்டாசுகள் உள்ளன என்ற விபரங்களுடன் எழுதி பட்டாசு விற்பனை படுஜோராக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைப்பதாகக் கூறி ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். பல பகுதிகளில் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, அறுசுவை உணவு சமைத்து, வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனால், இரவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஜொலித்தபடி காணப்பட்டது. நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது. அதன்படி, கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனையான 1 கிலோ மல்லிகைப்பூ, நேற்று, 1,200 ரூபாய்க்கும், ரூ.100க்கு விற்பனையான முல்லை பூ 700 ரூபாய்க்கும், ரூ.100க்கு விற்பனையான பன்னீர் ரோஜா 200 ரூபாய்க்கும், ரூ.500க்கு விற்பனையான கனகாம்பரம் பூ 1,500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட காஞ்சிபுரம் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
குன்றத்தூர் வடக்கு ஒன்றியத்தில் சேர்ந்த அனைத்து கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என அனைவருக்கும் ஸ்வீட்டுகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வந்தே மாதரம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில், கந்தகோட்டம் அருள்மிகு கந்தப்பார் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி கந்த சஷ்டி பெருவிழா ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விஷேச வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இத்திருவிழா நவம்பர் 5 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறிய வகை பலசரக்கு கடைக்காரர்கள் மற்றும் பெட்டி கடைக்காரர்கள் சில்லறை விற்பனைக்காகவும், தீபாவளி பண்ட் நடத்துவோரும் தங்களுக்கு தேவையான கிப்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.