India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூகுளில் <

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்குப் பகுதி 11ஆவது வட்டம் சார்பில் நேற்று(மார்ச் 2) நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பி. கணேசன் கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். இதில், திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

காஞ்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!

பெரிய காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.அ.நளினி உள்ளார். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 14 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற பிப்.28ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள் (90 நாட்கள்) வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. மேலும் இதற்கு மேல் தசை வழியே ஊசி மூலமாக ஒரே ஒருமுறை செலுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அனுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.