Kanchipuram

News March 2, 2026

காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவினை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் நேற்று(மார்ச் 1) வழங்கினர். அதில், ஒன்றியபொருளாளர் எறையூர் பரமசிவம், மாவட்ட விவசாய தொழிலாளரணி து.அமைபாளர் கொளத்தூர் அரிகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய மாணவரணி து.அமைபாளர் சந்தவேலூர் வேண்டாமணி தாக்கல் செய்தனர்.

News March 2, 2026

குன்றத்தூரில் பயங்கர தீ விபத்து!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கடை தீப் பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

News March 2, 2026

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கோபி(44). இவரது மகன் ஆதித்யா(17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ஆதித்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 2, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

காஞ்சி: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

காஞ்சிபுரம் மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

காஞ்சிபுரம்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

காஞ்சிபுரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

உத்திரமேரூரில் போட்டியிட எம்.எல்.ஏ சுந்தர் மனு

image

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விருப்பமனுக்கள பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது எம்எல்ஏ ஆக உள்ள சுந்தர், மீண்டும் போட்டியிட திமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று விருப்பமான தாக்கல் செய்துள்ளார்.

error: Content is protected !!