Kanchipuram

News March 13, 2026

காஞ்சிபுரம் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

image

படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவரது மனைவி ஜமீலா, தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News March 13, 2026

காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

image

படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவரது மனைவி ஜமீலா, தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News March 13, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News March 12, 2026

காஞ்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

காஞ்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

காஞ்சிபுரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

காஞ்சிபுரத்தில் போலீஸ் துடிதுடித்து பலி!

image

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(39). இவர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய கரும்பூர் சந்திப்பு அருகே எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 12, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!