Kanchipuram

News November 21, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர கூட்டம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. 51 வார்டுகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக மாநகராட்சி மாதாந்திர கூட்டமானது மேயர் மகாலட்சுமி தலைமையில் நடத்தப்பட்டு, அது குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்தவகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் அண்ணா அரங்கத்திலுள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று (நவ.20) நடைபெற்றது.

News November 21, 2024

ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் அறிவிப்பு

image

இந்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர்வளத்துறை மூலம் 6ஆவது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8 பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை www.awards.gov.in அல்லது www.Jalshakti-dowr.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக வரும் டிச.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். நீர் மேலாண்மை, பாதுகாப்புக்காக சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைத்து பங்குதாரர்களும் இதில் கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News November 21, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட தெற்கு கோட்டம் தாமல் துணை மின் நிலையத்தில், இன்று (நவ.21) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்துர், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

காஞ்சிபுரத்தில் நாளை மின்குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம், நாளை (நவ.21) வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் தொடர்பான அனைத்து குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

இந்தியில் மாறிய LIC இணையதளம்: திருமா கண்டனம்

image

காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, LIC இணையதளத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

News November 20, 2024

45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி

image

சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 20, 2024

கலை பண்பாட்டுத் துறை விருதுக்கு விண்ணப்பம்

image

காஞ்சிபுரத்தில், கலை பண்பாட்டுத் துறை விருது வழங்கப்பட உள்ளது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்களது கலைப் படைப்புகளை தன் விபரக்குறிப்புடனும், படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடனும், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரிக்கு வரும் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 20, 2024

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்: போலீஸ் விசாரணை

image

குன்றத்தூர், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன், கடந்த 17ஆம் தேதி தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த அனுபவத்தை தன்னுடைய வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, எழுச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் அப்துல் ஜலீல் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் மொத்தம் 1024 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கஞ்சா கடத்திய A+ ரவுடி கைது

image

கஞ்சா கடத்திய வழக்கில், A+ ரவுடி உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். செங்கழுநீரோடை பகுதியைச் சேர்ந்த வசா என்கிற வசந்த் A+ ரவுடி ஆவார். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது கூட்டாளிகளுடன் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தபோது காஞ்சிபுரம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News November 20, 2024

விவசாயிகளுக்கு குட்டை ரக தென்னங்கன்றுகள் 

image

பிச்சவாக்கதில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலையின் கீழ் இயங்கி வரும் மாநில தென்னை கன்று பண்ணையில் குட்டை ரக தென்னங்கன்றுகள் ரூ.125 க்கு கிடைக்கும் என்றும், தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தோட்டக்கலை அதிகாரிகள் செல்வி நந்தினி 8940235542 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் 9994611566 அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!