India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி, சின்ன குழந்தை. இவர் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதில் பலத்த காயமுற்ற மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் பழமை வாய்ந்த ஓட்டுவீட்டின் சுவர், தொடர் மழையின் காரணமாக ஈரப்பதம் அதிகரித்து இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது வினாடிக்கு 6132 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி 4632 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்), காஞ்சிபுரத்தில் 65.80 மி.மீ., மழையும், உத்திரமேரூரில் 29 மி.மீ., மழையும், வாலாஜாபாத்தில் 35 மி.மீ., மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 93 மி.மீ., மழையும், குன்றத்தூரில் 69 மி.மீ., மழையும், செம்பரம்பாக்கத்தில் 60.40 மி.மீ., மழையும் என மொத்தம் 352.20 மி.மீ., மழையும் சராசரியாக 58.70 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு துறை அலுவலக உதவியாளர், துப்புரவு தொழிலாளர்கள், ஜீப் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு, நடப்பு நிதி ஆண்டில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு அந்தந்த துறை சார்ந்த உயரதிகாரிகள் அமல்படுத்துவதில் தாமதமும், குறைந்த ஊதியமும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்குதல் திட்டத்தினை தமிழக அரசு முதன்முதலாக காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் அமல்படுத்தியது. இந்த திட்டம் கடந்த 25 நாட்களாக மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய மதுபானங்களுக்கு ரசீது வழங்கி உண்மை தன்மையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 16.6 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 14.1 செ.மீ., காஞ்சிபுரத்தில் 9.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலை 8 மணிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது 3977 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 24 அடியில் தற்போது 21.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. 22 அடியை எட்டிய பிறகு உபரி நீர் வெளியற்றபடும். ஏரியின் நீர் திறப்பு அறிவிப்பு வெளியிட்ட பின்னரே உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், காஞ்சிபுரத்தில் 0.8 செ.மீ., உத்திரமேரூரில் 0.2 செ.மீ., வாலாஜாபாத்தில் 1.4 செ.மீ., குன்றத்துாரில் 1.1 செ.மீ., மற்றும் செம்பரம்பாக்கத்தில் 1.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 6.6 செ.மீ., மழை நேற்று மாலை 6 மணி வரை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, 13ஆவது சுற்றுக்கு கிளார், பெரும்பாக்கம், குண்ணவாக்கம், வேண்பாக்கம், உள்ளாவூர், மதுரமங்கலம், காந்துார், ஆதனுார், மாடம்பாக்கம், அழிசூர், சாத்தனஞ்சேரி, ஆகிய ஊராட்சிகளில், நாளை காலை 11 மணிக்கு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. ஷேர் பண்ணுங்க
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்றுபோல் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.