Kanchipuram

News December 24, 2024

பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச.24) நடைபெற்று வருகிறது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி கண்டன கோஷங்களை எழுப்பி வருகிறார். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில், திரளான பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

image

காஞ்சிபுரத்தில் வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க கோரி, பல மாதங்களுக்கு முன் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் முகாம் நடத்தி தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News December 24, 2024

4,455 ஏக்கருக்கு இழப்பீடு வழங்க வேளாண் துறையினர் தீவிரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஏற்ப, பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. 4,455 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அதற்கு, ரூ.2.97 கோடி இழப்பீடு வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது.  விரைவில், அவரவர் வங்கி கணக்கிற்கு இழப்பீடு கிடைக்கும்.

News December 23, 2024

மரமே நடாத தலைமை ஆசிரியருக்கு சுற்றுசூழல் விருது?

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், வேலியூர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திருமலை நாராயணன் என்பவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பள்ளி வளாகத்தில் ஒரு மரத்தை கூட நடாதஅவருக்கு சுற்றுச்சூழல் பாராட்டு விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என குற்றம்சாட்டி வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

News December 23, 2024

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

image

மதுரமங்கலத்தை அடுத்த எடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூவரசன்(28) – ஷகிலா பானு (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் சுஸ்வின்(5) – மோகநந்தன் (2) உள்ளனர். சிறுவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர். மகன்களை அழைத்துச் செல்ல ஷகிலா பானு சென்றபோது, கழிவுநீர் தொட்டியில் மோகநந்தன் சடலமாக மிதந்து கிடந்ததை கண்டு கண்ணீரில் கதறி துடித்தார்.

News December 23, 2024

ரூ. லட்சம் மதிப்புள்ள 50+ செல்போன்கள் திருட்டு

image

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிரேம் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நேற்று காலை கடையை திறந்தபோது பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளை போயுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையானது தெரியவந்தது.

News December 22, 2024

போதை மாத்திரை விற்பனை செய்து வந்த இளைஞர்கள் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே காரணிதாங்கள் செக்போஸ்ட் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(23) மற்றும் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த சுமன் (20) ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த நிலையில் ஒரகடம் போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் கைது செய்து கையில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 

News December 22, 2024

கோமாரி தடுப்பூசி முகாம் ஜன.3ஆம் தேதிக்கு மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,69,200 பசு, எருமை, கன்று போன்ற கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிச.16ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடைபெற இருந்தது. இந்நிலையில், டிச.16ஆம் தேதிக்கு பதிலாக ஜன.3ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

ரூ.12 கோடி மதிப்பில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில், பயன்பாட்டில் இருந்த குழல் விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 12 கோடி ரூபாய் மதிப்பில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், தெருக்கள் என ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது நீண்ட நாள் உழைக்கும் என்பதால், பழுது ஏற்படுவது குறையும்.

News December 22, 2024

மகனை அடித்து கொலை: பகீர் தகவல்

image

புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த முனுசாமி (30) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் வீட்டில் தகராறு செய்யும் அவர், கடந்த 18ஆம் தேதி மது போதையில் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, தந்தை காத்தவராயன் ரீப்பர் கட்டையால் முனுசாமியை அடித்ததில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காத்தவராயன் தனது மருமகன் ராஜேஷ்க்கு (42) தெரிவிக்க, இருவரும் இணைந்து முனுசாமி உடலை கல்லால் கட்டி குளத்தில் வீசினர்.

error: Content is protected !!