Kanchipuram

News August 7, 2024

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 4 பேர் பலியாகி உள்ளதாக காவல் காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளனர். தாமல் ஏரிக்கரை அருகே லாரி – கார் மோதிய விபத்தில் ராமச்சந்திரா, தனசேகரன், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் – பைக் மோதிய விபத்தில் வெங்கடேஷ், ஊத்துக்காடு அருகே சாலையை கடக்க முயன்ற மணி ஆகிய 4 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

News August 6, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் குறித்த அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் வட்டத்தில் கூரம், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிள்ளைப்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் மலையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

News August 6, 2024

பரந்தூர் விமான நிலையம் அமைய முழு காரணம் மாநில அரசு

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தது. இதையடுத்து ஏகனாபுரம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதுடன், மத்திய விமான அமைச்சகத்திற்கு மறுபரிசீலனை செய்ய கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், விமான நிலைய அமைப்பதற்கும் முழு காரணம் மாநில அரசு என பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News August 6, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம், செவிலுமேடு, ஓரிக்கை, வாலாஜபாத், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

News August 6, 2024

சுற்றுலா தொழில் முனைவோருக்கு சுற்றுலா விருதுகள்

image

காஞ்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2024) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

மானியத் திட்டத்தின் கீழ் தொழில் மானியக் கடன்

image

தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு கடன் வசதிகளை ஊக்குவிக்கவும் இணை மானியத் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வரும் 14.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மகளிர் திட்ட அலுவலக இரண்டாவது மாடியில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் முகாம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

கல்வி உதவித்தொகைக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்

image

இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சினிமா தொழிலாளர்களின், 9-ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-25 நிதி ஆண்டிற்கான உதவி பெற https://scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

மாநகராட்சி பணிகள் குழு தலைவர் போட்டியின்றி தேர்வு

image

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரின் ஆதரவு பெற்ற பணிகள் குழு தலைவராக இருந்த சுரேஷ், குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்ததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற பணிகள் குழு தலைவர் போட்டியில், மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் 48ஆவது வார்டு கவுன்சிலர் கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

News August 6, 2024

காஞ்சிபுரத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

image

10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காந்தி ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது. இது, நாளை (ஆகஸ்ட் 7) முதல் 9ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அசல் பட்டு சேலை வகைகள் கண்காட்சிபடுத்த இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News August 6, 2024

காஞ்சி மாநகராட்சி அலுவலர் வீட்டில் சோதனை

image

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணிபுரிபவர் சியாமளா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து, நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்று காலை 6 மணி முதல் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!