India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.
திருப்புக்குழி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் – துளசி தம்பதியின் 7 வயது குழந்தை நேசிகா, திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயநாடு நிலச்சரிவில் ஏராளமான உயிரிழந்ததோடு, பலரும் வாழ்வாதாரத்துக்கு போராடி வருகின்றனர். நேசிகா, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நேற்று தலைமையாசிரியரிடம் கொடுத்து வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தில் நேற்று 10ஆவது தேசிய கைத்தறி தினவிழா நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ரக சேலைகளை உற்பத்தி செய்துவரும் 60 பேருக்கு நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.25 லட்சம், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 நெசவாளர்களுக்கு ரூ.36.70 லட்சம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.1200 மாத ஓய்வூதியத்திற்கான ஆணையை அமைச்சர் த.மோ.அன்பரசன் வழங்கினார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் தனியாா் பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு தனி நபரும் தனியாா் பேருந்து நிலையங்களை உருவாக்க அனுமதி இல்லை என தர்மபுரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (TEXPO 2024) என்ற தொழிற் கண்காட்சியை நடத்துகிறது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அரசு செயலர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திருப்போரூர், ஸ்ரீபெரும்பத்தூர், உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: காஞ்சிபுரம் – 22.22 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் -55 மி.மீ., உத்திரமேரூர் – 42.6 மி.மீ., வாலாஜாபாத் – 8 மி.மீ., குன்றத்தூர் – 77 மி.மீ., செம்பரம்பாக்கம் – 46.4 மி.மீ என மாவட்டம் முழுவதும் 251.20 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில், தாய்லாந்தில் 4ஆவது சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மடம் தெரு பகுதியில் அமைந்துள்ள காஞ்சி சிலம்பம் அகாடமி மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், காஞ்சிபுரம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 5 தங்கம், 5 வெள்ளி 2 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை வாழ்த்தலாமே!
Sorry, no posts matched your criteria.