Kanchipuram

News August 21, 2024

சங்கரமட மடாதிபதியுடன் அண்ணாமலை சந்திப்பு

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள மகா பெரியவர் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள சங்கரமட மடாதிபதியின் விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, சங்கர மடம் சார்பில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

News August 21, 2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 21, 2024

முதல்வர் கோப்பை போட்டிகள்: ஆட்சியர் அழைப்பு

image

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25ஆம் த்திக்குள் முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று தெரிவித்துளார்.

News August 21, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 21) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்படுவூா், தண்டலம், கண்டிவாக்கம், பிச்சிவாக்கம், கோட்டூா், கொட்டவாக்கம், ஏகனாபுரம், நாகப்பட்டு, ஆண்டி சிறுவள்ளூா், சிறுவாக்கம், காரை, சின்னிவாக்கம், மதுரமங்கலம், கண்ணன்தாங்கல், சிங்கில்பாடி, தொடுா், நீா்வள்ளூா், ராஜகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 21, 2024

கடந்த 3 ஆண்டுகளில் 6,588 பேருக்கு புற்றுநோய்

image

காரைப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வாயிலாக, கடந்த 3 ஆண்டுகளில் 28,000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6,588 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, புகையிலை பயன்படுத்துவதால் ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகளவு உள்ளது. புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால், கூடுதாக பல வசதிகளும், சேவைகளும் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

News August 20, 2024

ஒன்றரை வயது குழந்தையை கடித்த நாய்கள்

image

வாலாஜாபாத் அடுத்த நாய்க்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் – சுவேதா தம்பதியர். இவர்களது ஒன்றரை வயது குழந்தை பவிஷ் இன்று காலை விளையாடி கொண்டிருந்தபோது, தெரு நாய்கள் சரமாரியாக கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு

image

காஞ்சிபுரம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. செங்கல்பட்டு தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 97 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

உதயநிதியை சந்தித்து பேசிய அதிமுக கவுன்சிலர்

image

காஞ்சிபுரம் 20ஆவது வார்டு கவுன்சிலர் (ADMK) அகிலா தேவதாஸின் கணவர் திமுகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருவதால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று காஞ்சிபுரம் உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில், தேவதாஸ் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு இருவரையும் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால், மேயர் தரப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாரா? என்ற கோணத்திலும் தகவல்கள் பரவியிருந்தது.

News August 20, 2024

காஞ்சி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஜி.கே வாசன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூப்பனாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஷார் கிராம விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜி.கே. வாசன் வழங்கி சிறப்பித்தார். மற்றும் இரண்டு லட்சம் பனை விதை விதைத்த நபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.

News August 20, 2024

குன்றத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோவூரில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் உடனிருந்தார்.

error: Content is protected !!