India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் மயிலாப்பூரில் ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று (ஜன.31) வேலைக்கு செல்வதற்காக ‘பைக் டாக்சி செயலி’ மூலம் புக் செய்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து மாநகர பஸ் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் மீது பஸ் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (பிப். 1) அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <

காஞ்சிபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1)பஞ்சுப்பேட்டை பரிதீஸ்வரர் கோயில்(சூரிய பரிகாரம்)
2)வெள்ளைக்குளம் சந்திரேஸ்வரர் கோயில் ( திங்கள் பரிகாரம்)
3)பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோயில்( செவ்வாய் பரிகாரம்)
4)திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோயில்(புதன் தலம்)
5)பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரர் கோயில்( குரு பரிகாரம்)
6)காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோயில்( சுக்ரன் பரிகாரம்)
7)காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்( சனி பரிகாரம்)
அனைவருக்கும் SHARE!

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகம் அறிவித்துள்ளார். இந்தப் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமுள்ள இளைஞர்கள் 9444094286-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.