Kanchipuram

News February 2, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.01) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

காஞ்சிபுரம் பட்டு சேலையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்

image

மத்திய அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இணை தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற நிலையில் அவர் அணிந்திருந்த உடை என்று மிகவும் பேசும் பொருளாகியுள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி நெசவு மூலம் நெய்யப்பட்ட மெஜந்தா கலர் கொண்ட சேலை அணிந்திருந்தார்.

News February 1, 2026

காஞ்சி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

காஞ்சிபுரம்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

காஞ்சிபுரம்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

காஞ்சிபுரம்: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.

1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க

2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க

3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 1, 2026

காஞ்சிபுரம்: தாமிர ஒயர் திருட்டு சம்பவத்தில் 3 பேர் கைது!

image

உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் வயலில் உள்ள கிணறு பம்பு செட்டில் உள்ள தாமிர ஒயர்கள் திருடப்பட்டிருந்தது. சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் சாத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (20), 18 வயது சிறுவன், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ரோகித் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News February 1, 2026

காஞ்சிபுரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

காஞ்சிபுரம் அருகே அதிரடி கைது!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது உப்பரி குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய கஜா, லோகநாதன், சுரேஷ் ஆகிய மூவரைப் பிடித்து விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!